ஓவியம் பார்த்து
கவிதை ஒன்று
எழுதினேன்.
காப்புரிமை
வழக்கு போட்டான்
பிரம்மன்...
அவன் படைப்பை
நான்
காப்பி அடித்து
விட்டேன் என்று !!!
ஓவியம் பார்த்து
கவிதை ஒன்று
எழுதினேன்.
காப்புரிமை
வழக்கு போட்டான்
பிரம்மன்...
அவன் படைப்பை
நான்
காப்பி அடித்து
விட்டேன் என்று !!!
கடந்து சென்றது
ரோஜாக்கள் ஒட்டிய கார்
என் கைகளில்
மல்லிகை பூ !
============================
மேகம் கறுத்தது
முகம் இருண்டது
சலவை தொழிலாளி !
============================
கோடை முடிகிறது
வருத்தப்பட்டான்
குச்சி ஐஸ் கடைக்காரன் !
============================
சிரிக்கும் பேரக்குழந்தையை
தொட்டு கொஞ்ச முடியவில்லை
வீடியோ சாட்டில்
தாத்தா, பாட்டி
============================
உலகில் காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களினால் பலவித உயிரினங்கள் அழிந்தும் மற்றும் சில உயிரினங்கள் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டும் உள்ளன. அதே போல் நாகரீக வளர்ச்சியினால் நாம் பல பொருட்களை உபயோக படுத்தாமல் விட்டு, காலப்போக்கில் அவை நமது உபயோகத்தில் இருந்து மறைந்து இன்று அழிந்தும் போய்விட்டன.
அவற்றுள் நமது பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் சில, (எங்கேயாவது கண்ணுக்கு புலப்பட்டால் எடுத்து பாத்திரப்படுத்தி கொள்ளுங்கள்)
1. கேசட் (பாட்டு)
2. கேசட் (படம்)
3. வாக்மேன்
4. ஃபிளாப்பி டிஸ்க்
5. ஃபிலிம் காமிரா
6. அஞ்சல் அட்டை
இதே போல் இன்று அடுத்த வரிசையில் நிற்கும் சில பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்று,
1. அஞ்சலகம் – இ-மெயில்
2. காசோலை – இ-வர்த்தகம்
3. செய்தித்தாள் – இ-பேப்பர்
4. புத்தகம் – இ-புக்
இதுபோல் நாளுக்கு நாள் நம்மிடையே காணாமல் போகும் விஷயங்கள் பல. அவற்றுள் சிலதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
1. தொலைபேசி (Landline Phone)
2. மேசை கணினி (Desktop)
3. தொலைகாட்சி பெட்டி (Like CRT Monitor)
4. சிடி மற்றும் டிவிடி
அறிவியல் வளர்ச்சியால் இவைகளை இழந்தாலும், புதிய ஒன்றை நாம் வரவேற்க தவறுவதில்லை.
சென்னையில் ஷேர் ஆட்டோ பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இருப்பினும் எனது சில அபிப்ராயங்களை சொல்ல நினைக்கிறேன். ஒருநாள் எனது இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சாலை ஓரம் நின்றிருந்த ஒரு பெண்மணி திடீரென கை காட்ட, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சட்டென்று இடது பக்கம் ஒதுங்கிய வண்டி நான் எதிர்பாராத நேரத்தில் ஏன் வண்டியை குறுக்கிட்டு நின்றது. மோதாமல் தவிர்க்க நான் எனது வண்டியை திருப்ப, பின்னால் வந்த தோழர் என்னை வசை பாடி செல்ல, அன்று ஏதோ என் நல்ல நேரம் நான் தப்பித்தேன்.
பேருந்து நிற்பதற்கு 'பேருந்து நிறுத்தம்' என்று உள்ளது. சாலையில் நாம் பயணிக்கும் பொது கவனமுடன் செயல்படலாம். ஆனால் இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் திருப்பலாம், எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம், யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம். இப்பிரச்சினைக்கு வழி இல்லையா?
ஏன் இல்லை.
மனமிருந்தால் அனைத்தையும் நடத்தி காட்டலாம் ஏன் இந்த கவனக்குறைவு? இரண்டு பக்கமும் தவறு நடக்கிறது. பொது மக்களாகிய நாமும் சிறிது தூரம் நடக்க பயந்து நின்ற இடத்தில் ஆட்டோவை கூப்பிடுகிறோம். ஏன்? அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு சென்று அங்கு ஆட்டோவை அழைக்கலாமே. போக்குவரத்து துறை சில வரைமுறைகளை விதிக்கலாமே? அல்லது 'பேருந்து நிறுத்தம்' போல் 'ஷேர் ஆட்டோ நிறுத்தம்' ஒன்றை நடைமுறை படுத்தலாமே? நனவாகுமா?
அவள்
பார்வை மழை
அவள்
பேச்சு தென்றல்
அவள்
கூந்தல் கார்மேகம்
அவள்
தீண்டல் உஷ்ணம்
அவள்
அன்பெனும் ஊற்றெடுக்கும்
நல்ல நிலம்
ஐம்பூதங்கள்
அவளில் கண்டேன்
மெய் மறந்து
ரசித்து நின்றேன்.
சிறு கைகள் நீட்டி
பிள்ளை மொழியால்
எனை அழைத்தாள்
கை இரண்டில்
வாரிக்கொண்டேன்
என் மகளே
என்று அணைத்துக்கொண்டேன்
சில உன்னத தத்துவங்கள்....(பொது)
பணம்தான் எல்லாம் – தவறான கூற்று.
இப்போ ATM CARD, DEBIT CARD வந்தாச்சு....
விலங்குகளை நேசியுங்கள்...
ஆகா என்ன ருசி.
தண்ணீரை சேமிப்பீர்
பீர் அருந்துவீர் !
பக்கத்து வீட்டில் உள்ளோரை நேசியுங்கள்
மாட்டிக்கொள்ளாமல்.....
மாணவர்களுக்கு : -
படிப்பு ஆரோக்கியமானது... அதனால்
அதை நோயாளிகளுக்கு விட்டுக்கொடுத்துவிடலாம்,
புத்தகங்கள் புனிதமானவை...
எனவே அவைகளை தொடக்கூடாது
வகுப்பறையில் சத்தம் போடக்கூடாது...
தூங்குபவருக்கு தொல்லை ஏன்?
இந்தியா – வளம் கொழிக்கும் தேசம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் முன்னிலை வகிக்கும் நாடு நாம் இந்தியா. இப்படியெல்லாம் மார்தட்டிக்கொள்ள ஆசைதான். ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லையே (!). என்ன செய்ய ? ஊழல் பெருச்சாளிகள் இங்கிருந்த வளங்களை எல்லாம் சுரண்டி ஸ்விஸ் வங்கியில் அல்லவா சேர்த்திருக்கின்றன. அவற்றை மீட்க முடியுமா? நமது நாடு வளம் பொருந்திய நாடாக, பலம் பொருந்திய நாடாக மாறுமா ? இல்லை இவை அனைத்தும் வெறும் கனவாகவே போய்விடுமா? எல்லாம் 'ஆண்டவனுக்கு' தான் வெளிச்சம்.
அன்று வெள்ளையனை வெளியேற்றி அனுப்பிவிட்டு சந்தோசமாய் கூத்தாடினோம் – இனிமேல் நம் வீட்டை நாமே சுரண்டலாம் என்று. சுரண்டியதை வீட்டு மூலையில் வைத்திருந்தாலும் பரவாயில்லை. யாரை வெளியேற்ற அன்று போராட்டம் நடத்தினோமோ அந்த அன்னியரிடமே கொடுத்து வைத்துள்ளோம். சுதந்திரத்தின் பயனை நன்றாக அனுபவிக்கிறோம்.
வருமான வரி ஏய்ப்பு என்று ஒரு பூதம் இன்று நம் நாட்டில் உலா வந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.. ஊழல் பெருச்சாளிகள் ஒரு வகை என்றால், இவர்கள் இன்னொரு வகை. நேர்மையாக வாங்கும் சம்பளத்திற்க்கு வரி கட்ட என் தயங்குகிறோம். வரும் வருமானத்தை மறைத்து ஏன் நாட்டின் வளர்ச்சியை குலைக்கிறோம். இது நம் தேசமல்லவா. நாளை ஒரு பிரச்சனை என்றால் அது நமக்கும் சேர்த்துதானே வரும். பிரச்சினை என்று வந்தால் வெளிநாட்டில் வேலை செய்யும் தன் சொந்தங்களோடு சென்று தங்கிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு சந்தோசமாய் சுற்றி திரியும் இது போன்ற தேச துரோகிகளை என்னவென்று சொல்வது.
உலக வங்கியில் கடன். சகோதர நாடுகளிடம் கடன். நட்புறவு நாடுகளிடம் கடன். இப்படி கடன் மேல் கடன் வாங்கி சுவிஸ் வங்கியை நிரப்புவது எதற்காக? நாடு கடனாளியாய் இருக்க நாம் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் ஏன்? கடனை அடைக்க தலையை கொடுக்க சொல்லவில்லை. இனியும் நம் நாடு கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் வேண்டுகிறோம்.
போனது போகட்டும், இனிமேலாவது
1. லஞ்சம் கொடுக்காதே / வாங்காதே.
2. ஊழல் செய்யாதே / துணை போகாதே
3. வரி ஏய்ப்பு பசெய்யாதே
4. வளங்களை கருப்பு பணமாய் பதுக்காதே
5. நாட்டை சுரண்ட நினைக்காதே
என்று உங்கள் பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுங்கள். தேசிய கீதமாய், தாய் மொழி வாழ்த்தாய், ஒரு நல்ல குடிமகனின் உறுதிமொழியாய் எண்ணி இதனை பின் வரும் சந்ததிகளாவது பின்பற்றட்டும். இன்று இல்லை என்றாலும் நாளை நம் இந்தியா வளம் பொருந்திய நாடாகவும், பலம் பொருந்திய நாடாகவும் திகழட்டும்.
கனவு காண்கிறேன் – பலிக்குமா ?
மின்வெட்டு – இன்று தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது. கோடை காலங்களில் மனம் நோக்கடிக்கும் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது. நமது மின்தேவை என்பது வருடம் முழுவதும் சீராக இருப்பதில்லை. குளிர் மற்றும் மழை காலங்களில் குறைந்தும் கோடை காலங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. நமது நாட்டில் மின் உற்பத்தியில் அதிக மாற்றங்கள் இருப்பதில்லை. எனவே தான் கோடைகாலங்களில் மின்வெட்டால் அவஸ்தைப்படுகிறோம்.
இவ்வாறு மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் தொழிற்சாலைகள், தொடர்வண்டிகள், மற்றும் முக்கியமானவற்றுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு மற்றைய வீடுகள், பள்ளிகள், இதர பல இடங்களுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக நகரங்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு கிராமங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. நாட்டின் முதுகெலும்பாம் "விவசாய" த்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.
நல்ல குடிமக்களாகிய நாம் என்னவெல்லாம் செய்யலாம், இந்த மின் வெட்டை குறைப்பதிற்கு. அரசையே குறை கூறாமல் நாமும் நமது கடமையை செய்வோம்.
1. தேவை இல்லாத நேரங்களில் FAN, AC, TV, COMPUTER போன்றவற்றை அணைத்து வைக்கலாம். (STANDBY ம் மின்சாரம் எடுக்கும் – எனவே அதையும் தவிர்க்கலாம் )
2. முடிந்தவரை வீட்டில் இயற்கை காற்றோட்டமுள்ளதாக அமைத்தால் மின்விசிறியின் தேவை அதிகம் இருக்காது.
3. AC உபயோகிப்போர் பலர் "அண்டார்டிகா" போல் வேண்டும் என்று 16 DEG இல் வைக்கின்றனர். உடல் ஏற்றுக்கொள்ளும் வெப்பநிலையில் வைத்தாலே போதும். மனித உடலுக்கு 22 முதல் 26 வரை வைக்கலாம் (வெளிப்புற வெப்பநிலையை பொறுத்து). இதனால் பூமி வெப்பமாதலையும் தவிர்க்கலாம். மின்வெட்டையும் குறைக்கலாம்.
4. இன்று கணினி உபயோகிப்போர் அதிகம். உபயோக நேரம் போக மற்றைய நேரங்களில் அணைத்து வைப்பதால் கணிசமான மின்சாரத்தை சேமிக்கலாம்.
5. மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை தேவை இருந்தால் மட்டும் உபயோகப்படுத்தலாம் அல்லது மாற்று வழி இருந்தால் செயல்படுத்தலாம். உதாரணமாக, வெண்ணீருக்கு சூரிய அடுப்பு உபயோகிக்கலாம். INDUCTION STOVE க்கு பதிலாக GAS STOVE / OIL STOVE பயன்படுத்தலாம்.
6. இன்று TV தவிர்க்க முடியாத நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால் கோடைகாலங்களில் TV தவிர்த்து சுற்றுலா , விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
இவையெல்லாம் மின்வெட்டு வராமல் தடுக்க வழிகள். வருகின்ற மின்வெட்டை சமாளிப்பது எப்படி?
1. வீட்டில் INVERTER உபயோகிக்கலாம்.
2. மின்சாரத்தையே நம்பி இல்லாமல் ALTERNATE POWER SOURCE ஐ பயன்படுத்தலாம். உ.தா. சூரிய அடுப்பு, சூரிய சக்தி விளக்கு, சூரிய சக்தி விசிறி, சூரியசக்தியில் இயங்கும் இன்னபிற உபயோக பொருட்கள்.
3. முடிந்தால் சிறிய அளவுள்ள GENERATOR ஒன்று வாங்கி வைக்கலாம்.
இவை எல்லாம் பணம் படைத்தவர்களுக்கு. சாதாரண மக்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களுக்கு இருக்கவே இருக்கு பனையோலை விசிறி, மண்குடம் நீர் மற்றும் குளிர்ந்த மோர்.
சாமானிய மக்கள் வேறு என்னதான் செய்யமுடியும் ???!
பல் இல்லா
சிறு வாயாலே
மழலை மொழியால் பேசி
தலையை
இப்படியும் அப்படியும்
அசைத்து
இன்னிசையாய் பாடி
கவிதைகள்
பல எழுதியதைப்
போல்
காகிதத்தை
கிழித்த பின்பு
தன் பிள்ளை மொழியாலே
என் உள்ளமதில்
எழுதுகின்றாள் !
என் செல்லமகள் !
அவள் அழகு
புன்னகையில்
உலகத்தை
மறந்துவிட்டேன்!
அவள் பிஞ்சு விரல்
தீண்டலில்
என்னையே
மறந்துவிட்டேன் !!!
மனதையும்
மதியையும்
மயக்கி
எனை அடிமை
செய்திட்டாள்
என் செல்லமகள் !
இவள்
என் செல்வமகள்!