எனது பெற்றோர் இதுவரையில் லஞ்சம், ஊழல், பிறர் பொருள் அபகரிப்பு, அரசுடமை ஆக்ரமிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடவில்லை. நானும் இதுநாள் வரை இதுபோன்ற இழி செயல்களை செய்ததில்லை. எனது குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன். நான் அவர்களுடன் இருந்து கவனிக்க முடியாவிட்டாலும், நான் இட்ட விதை அவர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. அவர்களுக்கு பின் வருபவர்களும் அவ்வாறே இருக்க இன்றிலிருந்தே 'ஒழுக்க' கட்டுப்பாடு மனதளவில் விதிக்கப்பட்டு விட்டது.
இதன் மூலம் என்னால் மற்றும் எனது சந்ததியினரால் 'லஞ்சம், ஊழல், பிறர் பொருள் அபகரிப்பு, அரசுடமை ஆக்ரமிப்பு' போன்றவை வளராது என்பதை உறுதியுடன் கூறலாம். அதுபோல் தோழர்களே நீங்களும் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். இளைய தலைமுறையை லஞ்சம் & ஊழல் போன்ற கொடிய நோய்க்கு மருந்தாய் வளர்ப்போம். லஞ்சம் & ஊழல் இல்லாமல் இந்தியாவை உருவாக்குவோம்.
நமது அப்துல் காலம் அவர்கள் சொன்னது போல வீட்டுக்கு வீடு நல்ல மனிதர்களை வளர்ப்போம். இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்.