இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, October 19, 2012

தமிழ்சினிமாவும் அரைத்தமாவும்:

நமது தமிழக திரைப்படங்களை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட சலிப்புணர்வை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்துகிறேன். எனக்கு தோன்றியதையும் காதால் கேட்ட சிலவற்றையும் தொகுத்துள்ளேன். அரைத்த மாவாக இருந்தாலும் ( அதாவது வேறு எங்காவது படித்த மாதிரி தோன்றினாலும்) மீண்டும் ஒருமுறை ருசித்துதான் பாருங்களேன்.
 
1. கதாநாயகன் / கதாநாயகியின் தோழர்கள்/தோழிகள் முழு ஒப்பனையிலும் சுமாராக தான் இருப்பார்கள்.
2. கதாநாயகி அறிமுக காட்சியில் ஒரு குழந்தையையோ அல்லது வயதானவர்களையோ நெரிசல் மிக்க சாலையை கடக்க உதவுவார். அதுவே கதாநாயகனுடன் செல்லும் பொது கடக்க பயப்படுவார். கதாநாயகன் அணைத்தபடி அழைத்து செல்வார்.
3.  கதாநாயகியின் தந்தை நிச்சயம் காமெடியன் அல்லது வில்லன்.
4. கதாநாயகனின் தந்தை நேர்மையான காவல்துறை அதிகாரி / ஆசிரியர் / நாட்டாமை.
5. எல்லா காமெடியன்களும் வேலை தேடுவார்கள் அல்லது வெட்டியாய் ஊர் சுற்றுவார்கள்.
6. கிராமத்தில் பிறந்து வளர்ந்த கதாநாயகி மாடர்ன் உடையணிந்து வெளிநாட்டில் பாட்டு பாடி ஆடுவாள்.
7. வெறுமனே சுற்றும் கதாநாயகன் துப்பாக்கி எடுத்து குறி தவறாமல் சுடுவார். ஆனால் நன்கு பயிற்சி பெற்ற போலீசோ / தீவிரவாதியோ குறி தவறியே சுடுவார்கள்.
8. 100 அடியாட்கள் வந்தாலும், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து தான் அடிவாங்குவார்கள்.
9. காக்கை குரல் கதாநாயகன் கூட குயில் குரலில் பாடுவான்.
10. கதாநாயகனின் காதலுக்கு உதவி செய்வது மட்டுமே நண்பர்களின் வேலையாக இருக்கும்.
11. நண்பர்கள் சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டு பில்லை செலுத்த கதாநாயகனிடம் கையேந்துவார்கள்.
12. காதலர்கள் ஓடிப்போகும் போது ஊரே திரண்டு துரத்திவரும். ஆனால் அவர்கள் காதலிக்கும் போது ஊருக்குள் தான் சந்தித்துக்கொள்வார்கள். யாருக்குமே தெரியாது.
 
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
 
இவற்றில் சில உலக சினிமாவுக்கும் பொருந்தும். ஆயினும் தமிழர்களாகிய நாம் இன்னும் இதில் கூட முன்னேறாமல் பழைய மாவையே மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தரம் என்று சொல்லிக்கொண்டு, உலக சினிமாக்களின் DVD யை வாங்கி அப்படியே தமிழ் திரைப்படமாக எடுத்து, தமிழ் சினிமாவை 'உலக தரத்திற்கு' உயர்த்தும் நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கும் வரை நாம் இந்த இந்த கொடுமையை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த லட்சணத்தில் தயாரிப்பு செலவை பார்க்கும் போது திரையரங்கு நுழைவு கட்டணம் 'குறைவுதான்' என்று அறிக்கை விடும் சிலரை என்னவென்று சொல்வது?