இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, April 20, 2011

பெண்ணில்லா உலகம்:

பெண்ணில்லா உலகத்தை கற்பனை செய்ய முடிந்தால்....?!!! கற்பனை கூட செய்யமுடியாத ஒரு விஷயத்தை நாம் படிப்படியாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இன்றைய ஆணுக்கு பெண் விகிதம் 100 வருடங்களுக்கு முன்பை விட மிக குறைவாகவே உள்ளது. பெண்சிசு கொலை, வரதட்சணை கொலை, காதல் தோல்வி தற்கொலை, நகைக்காக கொலை என்று ஒவ்வொரு நாளும் பெண்ணினம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் மட்டுமே இருந்தால் இயற்கை சமநிலை என்னவாகும். இனப்பெருக்கம் இல்லாமல் மனித இனமே அழிந்து போய்விடாதா?

 

இன்று பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 793 பெண்களே உள்ளனர். மற்ற மாநிலங்களில் சராசரியாக 800 முதல் 900 வரையே. சீனாவில் 944 மற்றும் U.S.A வில் 1029 (2001 கணக்குப்படி). ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நமது கலாச்சாரம். பின்னாளில் அது சாத்தியமே இல்லாத வெறும் கூற்றாகவே இருக்கும்.

 

சமுதாயத்தில் பெண்ணுக்கு சம உரிமை இல்லாமையும் ஒரு மிகப்பெரிய காரணம். சம உரிமை என்பது யாரோ தரவேண்டிய ஒன்றல்ல. அவர்களிடம் பறிக்கப்படும் ஒன்று. அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும். அவர்களின் சுமரியாதையை மதித்தாலே போதும்.

 

டி‌வி தொடர் பார்த்தே காலத்தை கழிக்கும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. உள்ளேயே முடங்கி கிடக்க துடிக்கும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. மாமியார் என்று போர்வையில் கொடுமைகள் பல புரியும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. பெற்றோரை தவிக்க விட்டு காதலனுடன் ஓடிபோய் ஏமாறும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது. தனிக்குடித்தனம் என்ற பெயரில் கணவனின் பெற்றோரை "முதியோர் இல்லத்தில்" விடும் பெண்களை பற்றியல்ல நாம் பேசுவது.

 

நாம் பேசுவது முன்னேறவேண்டும் என்ற லட்சிய வெறி கொண்டு வாய்ப்புகளை தேடியலையும் பெண்களை பற்றி. நாம் பேசுவது படிக்கு ஆர்வம் இருந்தும் கூட்டிலேயே அடைக்கப்படும் பெண்களை பற்றி. தன்னபிக்கையோடு தன் சொந்தக்காலில் நிற்க துடிக்கும் பெண்களை பற்றி. நாட்டின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட நினைக்கும் பெண்களை பற்றி.

 

பெண்ணுக்கு வேலைவாய்ப்பு இருந்தால் வரதட்சணை தரத் தேவையில்லை. பெண்ணுக்கு வரதட்சணை இல்லாயெனில் பென்சிசுக்கொலை இல்லை. இதற்கு பெண்ணுக்கு உரிய உரிமை வழங்கப்படல் வேண்டும். அவர்கள் திறமையை வளர்க்க உதவ வேண்டும். மாற்று திரனாளிகளுக்கு மனமிரங்கி சலுகைகள் பல வழங்கும் அரசு பெண்களுக்கும் உதவ வேண்டும். ஒதுக்கீடு மட்டுமே தீர்வல்ல. "ஊக்கம்" அதுதான் தேவை. பெற்றோர், உடன்பிறந்தோர், நட்பு வட்டம் அனைவரும் தோள் கொடுக்கவேண்டும். அனைத்து இடங்களிலும் (வீட்டிலும்)  பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

பெண்ணே ! "என் மகனுக்கு ஒருபோதும் வரதட்சணை கேட்கமாட்டேன்" என்று உறுதி எடு. அழிவது பெண்ணினம் தான். பெண்ணினம் காக்க தோள் கொடு. வரதட்சணை கேட்டு பெண் கொடுமை செய்யாதே. நீ பெற்றெடுத்த பெண்ணை படிக்கவிடு. சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தை உருவாக்கிக்கொடு. வரதட்சணை கொடுக்காமல் ஒருவனுக்கு மணமுடித்து கொடு.

 

பெண்ணினம் அழிய பெண்ணே துணை நிற்பது எந்த விதத்தில் நியாயம். பெண்குழந்தை பெற்றெடுத்த மருமகளை வாழாவெட்டியாக்கி பார்க்கும் சமுதாய சீர்கேடு ஒழிய வேண்டும். பெண் குழந்தை பிறக்க ஆணும் காரணம் என்பதை உணர்ந்து, திருந்த வேண்டும். பென்சிசுக்கொலை முழுவதும் ஒழிய வேண்டும்.

 

ஆண்களுக்கு ஒரு செய்தி. இந்நிலை நீடித்தால் வரதட்சணை கொடுத்தாலும் பெண் கிடைக்காத நிலை ஏற்படும். உன் பேரனுக்கு இந்த நிலை தேவையா? யோசி. ஆண் மட்டுமே வாழும் ஒரு சமுதாயத்தை கற்பனை செய்து பார். கற்பனை கூட செய்யமுடியாத ஒரு விஷயத்தை நாம் படிப்படியாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம். ஆம். இன்னும் 500 வருடங்களில் பெண்ணினம் முற்றிலும் அழிந்து.. படிப்படியாக ஆணினமும் அழிந்து விடப்போகிறது.

 

மீண்டும் சொல்கிறேன்.

 

பெண்ணில்லா உலகத்தை கற்பனை செய்ய முடிந்தால்....?!!! கற்பனை கூட செய்யமுடியாத ஒரு விஷயத்தை நாம் படிப்படியாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.

Saturday, April 9, 2011

அகிம்சை வாழ்கிறது:

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆம். அகிம்சை ஜெயித்துவிட்டது. "காந்தியவாதி அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு மதிப்பளித்து, அவர் விரும்பிய வகையில் லோகபால் மசோதா பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மனமோகன் சிங் உறுதி அளித்துள்ளார்" (நன்றி – தினமலர்)இது நான் தினமலர் ONLINE இல் படித்தது.

 

ஒரு காந்தியவாதி நினைத்தால் எந்த ஒரு தீய சக்தியையும் அழித்துவிடமுடியும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஒரு எண்ணம், ஒரே பேச்சு – ஊழல் எதிர்ப்பு. ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

 

லஞ்சம் வாங்கும் / கொடுக்கும் மற்றும் ஊழல் புரியும் குடிமகனும் – ஒரு இந்தியன் தான். அவனுக்கு ஏன் இல்லை நமது நாட்டை பற்றிய சிந்தனை? ஏன் இல்லை நமது சகோதரர்கள் என்ற அக்கறை? தான் / தனக்கு / தன்னை சார்ந்தோருக்கு மட்டும் என்று வாழும் போக்கு ஏன்?

 

லஞ்சம், ஊழல் என்பனவும் தேச துரோக செயல்களே. ஒவ்வொரு நாள் தொடங்கும் போதும் ஒரு சாதாரண இந்திய குடிமகனின் கவலை என்னவாக இருக்கமுடியும் ? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு இந்தியனும் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினை என்னவாக இருக்க முடியும். அனைத்திற்கும் ஒரே பதில் -  லஞ்சம் & ஊழல் தான்.

 

சமுதாய அக்கறை உள்ள ஒவ்வொரு இந்தியனும் சூளுரைப்போம். இனி லஞ்சம் கொடுப்பதில்லை என்று. கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்று சப்பை கட்டி நாட்டின் முன்னேற்றதிற்கு பங்கம் விளைவிக்கும் முட்டாள்களை முட்டி தள்ளுவோம். கொடுக்காதே லஞ்சம். வளர்க்காதே ஊழல் பெருச்சாளிகளை என்று அகிம்சா வழியில் உறுதி எடுப்போம்.

 

பி.கு: வரதட்சணை என்பதும் ஒரு வகை லஞ்சமே.

Thursday, April 7, 2011

மூன்றாவது கண் (என் கருத்து) :

இலவசம். இது இல்லாமல் இன்று எதுவுமே இல்லை. மன்னிக்கவும். எனது "இலவசம்" என்பதற்கு வேறு விளக்கம் உள்ளது. நீங்களாகவே வேறு ஏதேனும் கற்பனை செய்தால் நான் பொறுப்பல்ல. சரி. விஷயத்திற்கு வருவோம். போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்கள் பேருந்திலோ அல்லது தொடர்வண்டியிலோ இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டம் இயற்றபட்டுள்ளதா என்பது நிச்சயமாக தெரியாது. ஆனால் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பது தெரியும். ஆனாலும் அத்துறையில் பணிபுரிபவர்கள் யாரும் பயணசீட்டு எடுப்பதாக தெரியவில்லை. பணிக்கு செல்லும்போது EXEMPTION கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுத்த சலுகையை தவறாக பயன்படுத்துவது பற்றி அவர்கள் கவலை படுவது கூட கிடையது. அப்படியானால், மின்சாரத்துறையில் பணிபுரிவோர் மின்சாரத்தை இலவசமாய் அனுபவிக்கலாம் மற்றும் மற்ற துறைகளில் பணிபுரிவோர் அதை சார்ந்த சொத்துக்களை தன் சொத்தாக நினைத்து அனுபவிக்கலாம் போலிருக்கிறது. இது சரியா. இப்படியே போனால் நாளை சாமானிய மக்களுக்கென்று "ஏமாற்றம்" மட்டும் தான் சொத்தாக இருக்கும் போலிருக்கிறது. இது வெறும் எடுத்துக்காட்டு தான்.

 

நாம் மற்றவர்களை குறை சொல்லியே காலம் கடத்துகிறோம். (என்னையும் சேர்த்துதான்). SELF DISCIPLINE என்று ஒரு விஷயம் இருப்பதை நாம் ஏன் மறந்து போனோம். சலுகை என்று வந்தால் அதனை தவறாக உபயோகிக்காமல் அனைவரையும் சென்றடைய நாம் ஏன் உறுதுணையாக இருக்கக்கூடாது?

 

( இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படுவது அல்ல – புண்படுத்தி இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் )

மூன்றாவது கண் (என் கருத்து)

சென்னை அரசு மருத்துவமனைக்கு செல்வோர் ( XYZ பிரிவில் மருத்துவம் பார்க்க செல்வோர்) கவனத்திற்கு. புறநோயாளிகளுக்கு அங்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர் ஒரு முறை எழுதி கொடுத்த சீட்டை நீங்கள் PHOTOCOPY எடுத்துதான் உபயோகிக்க வேண்டும். மருந்து சீட்டு புதியதாக தரப்படுவது இல்லை. கையில் PHOTOCOPY இல்லையெனில், ஏதோ செய்ய கூடாத தவறு செய்துவிட்டது போல் நோயாளிகள் மனம் நோகடிக்கப் படுகிறார்கள். பழைய சீட்டை வைத்து புதியதாக எழுதி கையொப்பமிட்டு தரலாமே? அல்லது மனம் நோகாமல் எடுத்து கூறலாமே.

 

மருந்து சீட்டு (PHOTOCOPY) எழுதி வாங்கியபின் மருந்தகத்தில் ஒரு பெரிய வரிசையில் நின்று COUNTER க்கு சென்றால் பாதி மருந்துக்கு மேல் STOCK இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். மருந்து சீட்டும் திரும்ப தரப்படுவதில்லை. குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் நோயாளிகள் நடத்தப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

 

STOCK இல்லை என்ற விஷயம் கூட தெரியாமல் மருந்துச்சீட்டு கொடுக்கும் மருத்துவரை நொந்துகொள்வதா? அல்லது சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு STOCK இல்லை என்று விரட்டும் PHARMASIST ஐ நொந்துகொள்வதா? என்று புரியாமல் "எல்லாம் விதி" என்று நொந்தபடியே வாயிலை நோக்கி நடையை கட்டும் நோயாளிகளை பார்க்கும் போது இதயம் கணக்கத்தான் செய்கிறது.

 

( இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படுவது அல்ல – புண்படுத்தி இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் )

Tuesday, April 5, 2011

அமைதி காக்க வேண்டிய இடங்கள் மற்றும் அவசியங்கள்:

 

1.   கோயில் – பலர் பலவிதமான கவலை, துக்கம், வேண்டுதல்களோடு வருவர்.

2.   பள்ளி – பாடம் பயிலும் இடம்

3.   பொது இடம் – பலரும் கூடும் இடம். வீண் அரட்டை வேண்டாமே.

4.   தொடர்வண்டி, பேருந்து – பயணத்தின் போது அனாவசிய பிரச்சினை எதற்கு. முடிந்தவரை புத்தகம் படிக்கலாம், வெளியில் வேடிக்கை பார்க்கலாம் அல்லது அமைதியாய் தூங்கலாம்.

5.   வீடு மற்றும் அலுவலகம் – அமைதியை கடைபிடிப்பது நமக்கும் நல்லது நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது.

 

அதற்க்காக பேசவே வேண்டாம் என்றும் யாரும் சொல்வதில்லை. வீண் அரட்டைகள், மற்றவரை புண்படுத்தும் பேச்சுக்கள், வீண் விவாதங்கள் போன்றவற்றை தவிர்த்தால் நம் உடல் நலத்திர்க்கும் நல்லது. தொடர்வண்டி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது தயவு கூர்ந்து நமது குடும்ப விவாதங்களை தவிர்ப்போம்.

ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்போர் கவனத்திற்கு:

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.அவ்வாறு உபயோகிக்கும் பொது கவனத்தில் கொள்ளவேண்டிய சில,

 

1.   எந்நேரமும் இன்டெர்நெட் connection ஐ ஆன் செய்து வைக்க வேண்டாம்.

2.   பொஸிஷனிங் சிஸ்டம் தேவையில்லையெனில் Disable செய்துவிடலாம்.

3.   முடிந்தவரை ஃபோனில் எடுத்த PHOTOS, VIDEOS ஐ நேராக UPLOAD செய்யாமல் EDIT செய்து அதில் உள்ள DATA வை முழுவதும் நீக்கிவிட்டு பின்பு UPLOAD செய்யலாம்.

4.   MAPS வசதியை உபயோகபடுத்தும் போது வீட்டு விபரங்களை தவிர்த்தல் நலம்.

5.   THIRD PARTY SOFTWARE போடும்போது நம்பகமான, ORIGINAL ஐ உபயோகிப்பது DATA LOSS ஐ தவிர்க்கும்.

 

இவை அனைத்தும் அனைவரும் அறிந்தவையே. இருப்பினும் இக்காலகட்டதில் அஜாக்கிரதையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாடுகளில், UPLOAD செய்யப்படும் PHOTO வை வைத்து உங்கள் சரித்திரத்தையே அலசுவதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

Friday, April 1, 2011

இ-சார்ஜ் எனும் பூதம் :

நம்மவர்களில் பலர் இ-சார்ஜ் செய்திருப்போம். அதற்கு நமது மொபைல் எண் தரவேண்டிவரும். அவ்வாறு தரும்போது privacy என்பது இல்லாமலே போகின்றது. எந்த ஒரு பெண்ணின் எண்ணையும் சுலபமாக பெறலாம். இதற்கு மாற்று வழி இருப்பதாகவும் தெரியவில்லை. இதை எந்தஒரு நிறுவனமும் சிந்தித்ததாக தெரியவில்லை. இன்றைய காலக்கட்டத்தில் ஆபாச SMS அனுப்புவதையே தொழிலாக கொண்டவர்கள் பலர். அவர்களுக்கு இந்த ரீசார்ஜ் முறையினால் நம்பரை தேடி அலையும் வேலை குறைகிறது. இவ்வளவு ஆபத்து இருந்தும் மக்கள் இதனை வரவேற்பதர்க்கு என்ன காரணம் என்றும் புரியவில்லை.