இந்த வலைப்பூவில் தேட....
திருக்குறள்
Tuesday, June 28, 2011
ஹன்சிகா (சிறுகதை) :
Tuesday, June 21, 2011
ஓவியம் (கவிதை) :
ஓவியம் பார்த்து
கவிதை ஒன்று
எழுதினேன்.
காப்புரிமை
வழக்கு போட்டான்
பிரம்மன்...
அவன் படைப்பை
நான்
காப்பி அடித்து
விட்டேன் என்று !!!
ஹைக்கூ :
கடந்து சென்றது
ரோஜாக்கள் ஒட்டிய கார்
என் கைகளில்
மல்லிகை பூ !
============================
மேகம் கறுத்தது
முகம் இருண்டது
சலவை தொழிலாளி !
============================
கோடை முடிகிறது
வருத்தப்பட்டான்
குச்சி ஐஸ் கடைக்காரன் !
============================
சிரிக்கும் பேரக்குழந்தையை
தொட்டு கொஞ்ச முடியவில்லை
வீடியோ சாட்டில்
தாத்தா, பாட்டி
============================
ஆசிரியர் என்னும் 'ஏணி' :
Saturday, June 18, 2011
புதிய பாடத் திட்டம் :
தப்பும் தவறும் :
காதலும் நாமும் :
Friday, June 17, 2011
லஞ்சம் & ஊழல் :
Wednesday, June 15, 2011
காணாமல் போனவை:
உலகில் காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களினால் பலவித உயிரினங்கள் அழிந்தும் மற்றும் சில உயிரினங்கள் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டும் உள்ளன. அதே போல் நாகரீக வளர்ச்சியினால் நாம் பல பொருட்களை உபயோக படுத்தாமல் விட்டு, காலப்போக்கில் அவை நமது உபயோகத்தில் இருந்து மறைந்து இன்று அழிந்தும் போய்விட்டன.
அவற்றுள் நமது பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் சில, (எங்கேயாவது கண்ணுக்கு புலப்பட்டால் எடுத்து பாத்திரப்படுத்தி கொள்ளுங்கள்)
1. கேசட் (பாட்டு)
2. கேசட் (படம்)
3. வாக்மேன்
4. ஃபிளாப்பி டிஸ்க்
5. ஃபிலிம் காமிரா
6. அஞ்சல் அட்டை
இதே போல் இன்று அடுத்த வரிசையில் நிற்கும் சில பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்று,
1. அஞ்சலகம் – இ-மெயில்
2. காசோலை – இ-வர்த்தகம்
3. செய்தித்தாள் – இ-பேப்பர்
4. புத்தகம் – இ-புக்
இதுபோல் நாளுக்கு நாள் நம்மிடையே காணாமல் போகும் விஷயங்கள் பல. அவற்றுள் சிலதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
1. தொலைபேசி (Landline Phone)
2. மேசை கணினி (Desktop)
3. தொலைகாட்சி பெட்டி (Like CRT Monitor)
4. சிடி மற்றும் டிவிடி
அறிவியல் வளர்ச்சியால் இவைகளை இழந்தாலும், புதிய ஒன்றை நாம் வரவேற்க தவறுவதில்லை.
Monday, June 13, 2011
ஷேர் ஆட்டோ :
சென்னையில் ஷேர் ஆட்டோ பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இருப்பினும் எனது சில அபிப்ராயங்களை சொல்ல நினைக்கிறேன். ஒருநாள் எனது இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சாலை ஓரம் நின்றிருந்த ஒரு பெண்மணி திடீரென கை காட்ட, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சட்டென்று இடது பக்கம் ஒதுங்கிய வண்டி நான் எதிர்பாராத நேரத்தில் ஏன் வண்டியை குறுக்கிட்டு நின்றது. மோதாமல் தவிர்க்க நான் எனது வண்டியை திருப்ப, பின்னால் வந்த தோழர் என்னை வசை பாடி செல்ல, அன்று ஏதோ என் நல்ல நேரம் நான் தப்பித்தேன்.
பேருந்து நிற்பதற்கு 'பேருந்து நிறுத்தம்' என்று உள்ளது. சாலையில் நாம் பயணிக்கும் பொது கவனமுடன் செயல்படலாம். ஆனால் இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் திருப்பலாம், எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம், யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம். இப்பிரச்சினைக்கு வழி இல்லையா?
ஏன் இல்லை.
மனமிருந்தால் அனைத்தையும் நடத்தி காட்டலாம் ஏன் இந்த கவனக்குறைவு? இரண்டு பக்கமும் தவறு நடக்கிறது. பொது மக்களாகிய நாமும் சிறிது தூரம் நடக்க பயந்து நின்ற இடத்தில் ஆட்டோவை கூப்பிடுகிறோம். ஏன்? அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு சென்று அங்கு ஆட்டோவை அழைக்கலாமே. போக்குவரத்து துறை சில வரைமுறைகளை விதிக்கலாமே? அல்லது 'பேருந்து நிறுத்தம்' போல் 'ஷேர் ஆட்டோ நிறுத்தம்' ஒன்றை நடைமுறை படுத்தலாமே? நனவாகுமா?
Wednesday, June 1, 2011
ஐம்பூதங்கள் (கவிதை) :
அவள்
பார்வை மழை
அவள்
பேச்சு தென்றல்
அவள்
கூந்தல் கார்மேகம்
அவள்
தீண்டல் உஷ்ணம்
அவள்
அன்பெனும் ஊற்றெடுக்கும்
நல்ல நிலம்
ஐம்பூதங்கள்
அவளில் கண்டேன்
மெய் மறந்து
ரசித்து நின்றேன்.
சிறு கைகள் நீட்டி
பிள்ளை மொழியால்
எனை அழைத்தாள்
கை இரண்டில்
வாரிக்கொண்டேன்
என் மகளே
என்று அணைத்துக்கொண்டேன்