கீதை இருந்தும்
குரான், பைபிள் இருந்தும்
நம்மை வழிநடத்துவது
இ.பி.கோ !
காலை எழுவது முதல்
இரவு படுக்கும் முன்பு வரை
இ.பி.கோ நமது பின்னால்!
மனிதா !
புனித நூல் வெறுமனே
பூஜைக்கு மட்டுமோ?
சந்தனம் தடவி
பன்னீர் தெளித்து
முப்பொழுது பூஜை
செய்தால் மட்டும் போதும் !
வாழ வழி வகுத்து
நல்ல நெறிகள் பலச்சொல்லி
நலவாழ்வுக்கு இட்டு செல்லும்
புனிதநூல்கள்
வெறும் பூஜை பொருளாய்!
கடவுளை கல்லாக்கி
கருவறையில் பூட்டுபவர்கள் நாம்!
இந்த புத்தகங்கள் எம்மாத்திரம் !