இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 13, 2012

குழந்தை கவிதைகள்:

பொம்மைக்கு
உறக்கம் வரவில்லை,
தாலாட்டு பாடியபடி
உறங்கியது குழந்தை!
 
சோறூட்டும் குழந்தையை
பார்க்கும் போது
சந்தேகம் வலுக்கிறது.
ஒருவேளை,
பொம்மைக்கும் பசிக்குமோ?
 
கொசு கடித்து
அழுதது குழந்தை.
மின்சாரம் இல்லா இரவில்
பனை விசிறி தேடி
விசிறியது
பொம்மைக்கு!
கொசு கடிக்குதாம்!