இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 13, 2012

கிறுக்கல் (எ) கவிதை :

என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
தினமும் பிறப்பதாய் எண்ணி
என்னை நானே ஏமாற்றுகிறேன்,
 
இன்றைக்கு மின்சாரம் வருமென்று
தினமும் நான் பிறக்கிறேன்!
 
வருமா வராதா என்று
கேளிக்கை பார்த்து சிரித்த நாட்கள்
 
இன்று என்னை பார்த்து
சிரிப்பதாய் தோன்றுகிறது.
 
என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !