இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, September 17, 2013

ரூபாய் மதிப்பு:

     ரூபாய் மதிப்பு ஏற்றம் இறக்கம் ஒருவகையில் மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. டீக்கடை, பேருந்து, மளிகை கடை என்று இடம் பேதமில்லாமல் அனைவரும் பேசிய ஒரு விஷயம் இதுதான் என்று சொல்லுமளவிற்கு போய்விட்டது. பணத்தின் மதிப்பை உயர்த்த அரசியல் வாதிகள் சொல்லும் யோசனைகள் ஒருவகையில் அபத்தமாக தோன்றினாலும், எனக்கு ஒருவகையில் சரியென்றே தோன்றியது. என்னுடைய எண்ண ஓட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். 

  தேவை அதிகரிக்கும் போதுதான் ஒருபொருளின் இறக்குமதி அதிகமாயிருக்கும். எனவே நமது தேவையை ஏன் நாம் குறைத்துக் கொள்ள கூடாது. எனக்கு தெரிந்த வகையில் என்னுடைய பதிவு ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டு எழுதியுள்ளேன். தனிநபர் ஒருவருக்கு பெரிய கார் எதற்கு? பக்கத்து தெருவிற்கு செல்ல கார் எதற்கு? பொது போக்குவரத்தை பயன்படுத்த ஏன் தயக்கம்?

         லிட்டருக்கு எவ்வளவு தரும் என்று விளம்பரங்களை பார்க்கும் போதே நமது நிலை புரிந்து விடுகிறது. முடிந்தவரை தனி வாகன பயன்பாட்டை குறைத்தாலே போதும்.

       அதேபோல் தங்கம். வாங்கி குவிக்கும் சிலரின் பேராசையினால் தங்கத்தின் தேவை அதிகரித்து இப்பொழுது தங்கத்தின் விலையும் எங்கோ சென்றுவிட்டது. 

        என்னுடைய கருத்து என்னவெனில் பெட்ரோல், டீசல், தங்கம் இவற்றை நாம் நமது கட்டுப்பட்டிற்குள் வைக்கலாம். அதற்கு நமது வறட்டு கௌரவத்தை விட்டொழித்தாலே போதும். முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்த முயற்சிப்போம்.