இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, June 1, 2011

ஐம்பூதங்கள் (கவிதை) :

அவள்

பார்வை மழை

 

அவள்

பேச்சு தென்றல்

 

அவள்

கூந்தல் கார்மேகம்

 

அவள்

தீண்டல் உஷ்ணம்

 

அவள்

அன்பெனும் ஊற்றெடுக்கும்

நல்ல நிலம்

 

ஐம்பூதங்கள்

அவளில் கண்டேன்

 

மெய் மறந்து

ரசித்து நின்றேன்.

 

சிறு கைகள் நீட்டி

பிள்ளை மொழியால்

எனை அழைத்தாள்

 

கை இரண்டில்

வாரிக்கொண்டேன்

 

என் மகளே

என்று அணைத்துக்கொண்டேன்