நாம் தெரிந்தே செய்யும் தப்புகளும் தெரியாமல்(!) செய்யும் தவறுகளும்...
1. தன் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'புகை' பிடிப்பது
2. தன் குடும்பத்தின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'மது' அருந்துவது
3. பிறரின் உயிரை சேர்த்து குடிக்கும் என்று தெரிந்தும் 'சாலை விதி'யை மதிக்காதது
4. தன் மற்றும் உடன் வருபவரின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'தலை கவசம்' அணியாதது
5. மக்களின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'லஞ்சம்' வாங்குவது
6. நாட்டின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'ஊழல்' செய்வது
7. உலகத்தின் உயிரை குடிக்கும் என்று தெரிந்தும் 'பூமி வெப்பமயமாதலுக்கு' துணை போவது
8. நாளைய தலைமுறைக்கு தேவையில்லை என்று, இருக்கும் வளங்களை தின்று தீர்ப்பது
9. BLOG ஒன்றை நிறுவி இப்படி அடுத்தவங்களை குறை சொல்வது (சத்தியமா இது எனக்கு மட்டும் பொருந்தும்)
10. ......
11. .......
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவற்றுள் தப்பு எவை, தவறு எவை என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.