இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, June 13, 2011

ஷேர் ஆட்டோ :

சென்னையில் ஷேர் ஆட்டோ பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இருப்பினும் எனது சில அபிப்ராயங்களை சொல்ல நினைக்கிறேன். ஒருநாள் எனது இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சாலை ஓரம் நின்றிருந்த ஒரு பெண்மணி திடீரென கை காட்ட, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சட்டென்று இடது பக்கம் ஒதுங்கிய வண்டி நான் எதிர்பாராத நேரத்தில் ஏன் வண்டியை குறுக்கிட்டு நின்றது. மோதாமல் தவிர்க்க நான் எனது வண்டியை திருப்ப, பின்னால் வந்த தோழர் என்னை வசை பாடி செல்ல, அன்று ஏதோ என் நல்ல நேரம் நான் தப்பித்தேன்.

 

       பேருந்து நிற்பதற்கு 'பேருந்து நிறுத்தம்' என்று உள்ளது. சாலையில் நாம் பயணிக்கும் பொது கவனமுடன் செயல்படலாம். ஆனால் இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் திருப்பலாம், எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம், யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம். இப்பிரச்சினைக்கு வழி இல்லையா?

 

       ஏன் இல்லை.

      

       மனமிருந்தால் அனைத்தையும் நடத்தி காட்டலாம் ஏன் இந்த கவனக்குறைவு? இரண்டு பக்கமும் தவறு நடக்கிறது. பொது மக்களாகிய நாமும் சிறிது தூரம் நடக்க பயந்து நின்ற இடத்தில் ஆட்டோவை கூப்பிடுகிறோம். ஏன்? அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு சென்று அங்கு ஆட்டோவை அழைக்கலாமே. போக்குவரத்து துறை சில வரைமுறைகளை விதிக்கலாமே? அல்லது 'பேருந்து நிறுத்தம்' போல் 'ஷேர் ஆட்டோ நிறுத்தம்' ஒன்றை நடைமுறை படுத்தலாமே? நனவாகுமா?