இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, May 27, 2011

மெயிலில் வந்தவை :

சில உன்னத தத்துவங்கள்....(பொது)

 

       பணம்தான் எல்லாம் – தவறான கூற்று.

       இப்போ ATM CARD, DEBIT CARD வந்தாச்சு....

 

       விலங்குகளை நேசியுங்கள்...

       ஆகா என்ன ருசி.

 

       தண்ணீரை சேமிப்பீர்

       பீர் அருந்துவீர் !

 

       பக்கத்து வீட்டில் உள்ளோரை நேசியுங்கள்

       மாட்டிக்கொள்ளாமல்.....

 

 

மாணவர்களுக்கு : -

 

       படிப்பு ஆரோக்கியமானது... அதனால்

       அதை நோயாளிகளுக்கு விட்டுக்கொடுத்துவிடலாம்,

 

       புத்தகங்கள் புனிதமானவை...

       எனவே அவைகளை தொடக்கூடாது

 

       வகுப்பறையில் சத்தம் போடக்கூடாது...

       தூங்குபவருக்கு தொல்லை ஏன்?

Wednesday, May 18, 2011

கிரிக்கெட் (சிறுகதை):

ராமு உள்ளே நுழையும்போதே அப்பாவின் அதட்டல் தடுத்து நிறுத்தியது. விடுமுறையன்று நண்பர்களுடன் விளையாட சென்றதன் விளைவு. அதுவும் கிரிக்கெட் என்றால் சோம்பேறிகளின் விளையாட்டு என்று இன்னுமும் கொஞ்சம் அனல் அதிகம் பறக்கும். வழக்கம் போல் அல்லாமல் இன்று தண்டனை வேறு விதமாய் வந்தது பள்ளிக்கு செல்ல கூடாது என்று. சைக்கிள் சாவியும் பறிக்கப்பட்டது. இது என்ன புதுக்கதை என்று கேட்ட அம்மாவின் வார்த்தைகளும் காற்றில் கரைந்து போயின.

ஒன்று, இரண்டு என்று நாட்கள் நகர்ந்தன, ஆனாலும் அப்பாவின் கோபம் தணிந்தபாடில்லை. இன்று நடந்தாவது பள்ளிக்கு சென்று விடலாம் என்று புத்தக பையை எடுத்தவன் அப்பாவின் உருட்டு கண்களை பார்த்து மிரண்டு போய் அப்படியே வைத்துவிட்டு திண்ணையிலேயே அமர்ந்து போனான். மறுநாள் அப்பா இல்லாத நேரம் பார்த்து நடந்தே போய்விடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டான். நாட்கள் நகர நகர அப்பாவின் கோபமும் தணிந்தது. இப்பொழுது ராமு திரும்பவும் சைக்கிள் எடுத்து பள்ளிக்கு சென்று வருகிறான். கிரிக்கெட் என்றால் காத தூரம் ஓடி விடுவான். சும்மாவா, ஒரு மாதம் வெய்யிலில் 15 கி.மி. நடந்து பள்ளிக்கு சென்றவனாயிற்றே.

"மீ.. நான் வெளியில் போறேன்" கிறீச்சீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் பறக்கும் இரண்டாவது பேரனின் குரல்கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டார் ராமு. என்ன மாமா வாக்கிங் போகாலயா? அன்புடன் கேட்ட மருமகளிடம் "இதோ கிளம்பிட்டேன்மா" என்றவாறு பக்கத்து பூங்கா நோக்கி நடக்க ஆரம்பித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் மாதவனின் தாத்தா ராமு.

Thursday, May 12, 2011

கனவு காண்கிறேன் – பலிக்குமா ?

    இந்தியா – வளம் கொழிக்கும் தேசம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் முன்னிலை வகிக்கும் நாடு நாம் இந்தியா. இப்படியெல்லாம் மார்தட்டிக்கொள்ள ஆசைதான். ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லையே (!). என்ன செய்ய ? ஊழல் பெருச்சாளிகள் இங்கிருந்த வளங்களை எல்லாம் சுரண்டி ஸ்விஸ் வங்கியில் அல்லவா சேர்த்திருக்கின்றன. அவற்றை மீட்க முடியுமா? நமது நாடு வளம் பொருந்திய நாடாக, பலம் பொருந்திய நாடாக மாறுமா ? இல்லை இவை அனைத்தும் வெறும் கனவாகவே போய்விடுமா? எல்லாம் 'ஆண்டவனுக்கு' தான் வெளிச்சம்.

 

       அன்று வெள்ளையனை வெளியேற்றி அனுப்பிவிட்டு சந்தோசமாய் கூத்தாடினோம் – இனிமேல் நம் வீட்டை நாமே சுரண்டலாம் என்று. சுரண்டியதை வீட்டு மூலையில் வைத்திருந்தாலும் பரவாயில்லை. யாரை வெளியேற்ற அன்று போராட்டம் நடத்தினோமோ அந்த அன்னியரிடமே கொடுத்து வைத்துள்ளோம். சுதந்திரத்தின் பயனை நன்றாக அனுபவிக்கிறோம்.

 

       வருமான வரி ஏய்ப்பு என்று ஒரு பூதம் இன்று நம் நாட்டில் உலா வந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.. ஊழல் பெருச்சாளிகள் ஒரு வகை என்றால், இவர்கள் இன்னொரு வகை. நேர்மையாக வாங்கும் சம்பளத்திற்க்கு வரி கட்ட என் தயங்குகிறோம். வரும் வருமானத்தை மறைத்து ஏன் நாட்டின் வளர்ச்சியை குலைக்கிறோம். இது நம் தேசமல்லவா. நாளை ஒரு பிரச்சனை என்றால் அது நமக்கும் சேர்த்துதானே வரும். பிரச்சினை என்று வந்தால் வெளிநாட்டில் வேலை செய்யும் தன் சொந்தங்களோடு சென்று தங்கிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு சந்தோசமாய் சுற்றி திரியும் இது போன்ற தேச துரோகிகளை என்னவென்று சொல்வது.

 

       உலக வங்கியில் கடன். சகோதர நாடுகளிடம் கடன். நட்புறவு நாடுகளிடம் கடன். இப்படி கடன் மேல் கடன் வாங்கி சுவிஸ் வங்கியை நிரப்புவது எதற்காக? நாடு கடனாளியாய் இருக்க நாம் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் ஏன்? கடனை அடைக்க தலையை கொடுக்க சொல்லவில்லை. இனியும் நம் நாடு கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் வேண்டுகிறோம்.

 

       போனது போகட்டும், இனிமேலாவது

 

1.   லஞ்சம் கொடுக்காதே / வாங்காதே.

2.   ஊழல் செய்யாதே / துணை போகாதே

3.   வரி ஏய்ப்பு பசெய்யாதே

4.   வளங்களை கருப்பு பணமாய் பதுக்காதே

5.   நாட்டை சுரண்ட நினைக்காதே

 

என்று உங்கள் பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுங்கள். தேசிய கீதமாய், தாய் மொழி வாழ்த்தாய், ஒரு நல்ல குடிமகனின் உறுதிமொழியாய் எண்ணி இதனை பின் வரும் சந்ததிகளாவது பின்பற்றட்டும். இன்று இல்லை என்றாலும் நாளை நம் இந்தியா வளம் பொருந்திய நாடாகவும், பலம் பொருந்திய நாடாகவும் திகழட்டும்.   

 

       கனவு காண்கிறேன் – பலிக்குமா ?

Thursday, May 5, 2011

மின்வெட்டு :

மின்வெட்டு – இன்று தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது. கோடை காலங்களில் மனம் நோக்கடிக்கும் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது. நமது மின்தேவை என்பது வருடம் முழுவதும் சீராக இருப்பதில்லை. குளிர் மற்றும் மழை காலங்களில் குறைந்தும் கோடை காலங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. நமது நாட்டில் மின் உற்பத்தியில் அதிக மாற்றங்கள் இருப்பதில்லை. எனவே தான் கோடைகாலங்களில் மின்வெட்டால் அவஸ்தைப்படுகிறோம்.

 

       இவ்வாறு மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் தொழிற்சாலைகள், தொடர்வண்டிகள், மற்றும் முக்கியமானவற்றுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு மற்றைய வீடுகள், பள்ளிகள், இதர பல இடங்களுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக நகரங்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு கிராமங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. நாட்டின் முதுகெலும்பாம் "விவசாய" த்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.

 

       நல்ல குடிமக்களாகிய நாம் என்னவெல்லாம் செய்யலாம், இந்த மின் வெட்டை குறைப்பதிற்கு. அரசையே குறை கூறாமல் நாமும் நமது கடமையை செய்வோம்.

 

1.   தேவை இல்லாத நேரங்களில் FAN, AC, TV, COMPUTER போன்றவற்றை அணைத்து வைக்கலாம். (STANDBY ம் மின்சாரம் எடுக்கும் – எனவே அதையும் தவிர்க்கலாம் )

2.   முடிந்தவரை வீட்டில் இயற்கை காற்றோட்டமுள்ளதாக அமைத்தால் மின்விசிறியின் தேவை அதிகம் இருக்காது.

3.   AC உபயோகிப்போர் பலர் "அண்டார்டிகா" போல் வேண்டும் என்று 16 DEG இல் வைக்கின்றனர். உடல் ஏற்றுக்கொள்ளும் வெப்பநிலையில் வைத்தாலே போதும். மனித உடலுக்கு 22 முதல் 26 வரை வைக்கலாம் (வெளிப்புற வெப்பநிலையை பொறுத்து). இதனால் பூமி வெப்பமாதலையும் தவிர்க்கலாம். மின்வெட்டையும் குறைக்கலாம்.

4.   இன்று கணினி உபயோகிப்போர் அதிகம். உபயோக நேரம் போக மற்றைய நேரங்களில் அணைத்து வைப்பதால் கணிசமான மின்சாரத்தை சேமிக்கலாம்.

5.   மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை தேவை இருந்தால் மட்டும் உபயோகப்படுத்தலாம் அல்லது மாற்று வழி இருந்தால் செயல்படுத்தலாம். உதாரணமாக, வெண்ணீருக்கு சூரிய அடுப்பு உபயோகிக்கலாம். INDUCTION STOVE க்கு பதிலாக GAS STOVE / OIL STOVE பயன்படுத்தலாம்.

6.   இன்று TV தவிர்க்க முடியாத நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால் கோடைகாலங்களில் TV தவிர்த்து சுற்றுலா , விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

 

       இவையெல்லாம் மின்வெட்டு வராமல் தடுக்க வழிகள். வருகின்ற மின்வெட்டை சமாளிப்பது எப்படி?

 

1.   வீட்டில் INVERTER உபயோகிக்கலாம்.

2.   மின்சாரத்தையே நம்பி இல்லாமல் ALTERNATE POWER SOURCE ஐ பயன்படுத்தலாம். உ.தா. சூரிய அடுப்பு, சூரிய சக்தி விளக்கு, சூரிய சக்தி விசிறி, சூரியசக்தியில் இயங்கும் இன்னபிற உபயோக பொருட்கள்.

3.   முடிந்தால் சிறிய அளவுள்ள GENERATOR ஒன்று வாங்கி வைக்கலாம்.

 

       இவை எல்லாம் பணம் படைத்தவர்களுக்கு. சாதாரண மக்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களுக்கு இருக்கவே இருக்கு பனையோலை விசிறி, மண்குடம் நீர் மற்றும் குளிர்ந்த மோர்.

 

       சாமானிய மக்கள் வேறு என்னதான் செய்யமுடியும் ???!

Monday, May 2, 2011

குழந்தை மொழி மழலை ( கவிதை ) :

பல் இல்லா

சிறு வாயாலே

மழலை மொழியால் பேசி

தலையை

இப்படியும் அப்படியும்

அசைத்து

இன்னிசையாய் பாடி

 

கவிதைகள்

பல எழுதியதைப்

போல்

காகிதத்தை

கிழித்த பின்பு

தன் பிள்ளை மொழியாலே

என் உள்ளமதில்

எழுதுகின்றாள் !

என் செல்லமகள் !

 

அவள் அழகு

புன்னகையில்

உலகத்தை

மறந்துவிட்டேன்!

அவள் பிஞ்சு விரல்

தீண்டலில்

என்னையே

மறந்துவிட்டேன் !!!

 

மனதையும்

மதியையும்

மயக்கி

எனை அடிமை

செய்திட்டாள்

என் செல்லமகள் !

இவள்

என் செல்வமகள்!