இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, May 5, 2011

மின்வெட்டு :

மின்வெட்டு – இன்று தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது. கோடை காலங்களில் மனம் நோக்கடிக்கும் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது. நமது மின்தேவை என்பது வருடம் முழுவதும் சீராக இருப்பதில்லை. குளிர் மற்றும் மழை காலங்களில் குறைந்தும் கோடை காலங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. நமது நாட்டில் மின் உற்பத்தியில் அதிக மாற்றங்கள் இருப்பதில்லை. எனவே தான் கோடைகாலங்களில் மின்வெட்டால் அவஸ்தைப்படுகிறோம்.

 

       இவ்வாறு மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் தொழிற்சாலைகள், தொடர்வண்டிகள், மற்றும் முக்கியமானவற்றுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு மற்றைய வீடுகள், பள்ளிகள், இதர பல இடங்களுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக நகரங்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு கிராமங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. நாட்டின் முதுகெலும்பாம் "விவசாய" த்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.

 

       நல்ல குடிமக்களாகிய நாம் என்னவெல்லாம் செய்யலாம், இந்த மின் வெட்டை குறைப்பதிற்கு. அரசையே குறை கூறாமல் நாமும் நமது கடமையை செய்வோம்.

 

1.   தேவை இல்லாத நேரங்களில் FAN, AC, TV, COMPUTER போன்றவற்றை அணைத்து வைக்கலாம். (STANDBY ம் மின்சாரம் எடுக்கும் – எனவே அதையும் தவிர்க்கலாம் )

2.   முடிந்தவரை வீட்டில் இயற்கை காற்றோட்டமுள்ளதாக அமைத்தால் மின்விசிறியின் தேவை அதிகம் இருக்காது.

3.   AC உபயோகிப்போர் பலர் "அண்டார்டிகா" போல் வேண்டும் என்று 16 DEG இல் வைக்கின்றனர். உடல் ஏற்றுக்கொள்ளும் வெப்பநிலையில் வைத்தாலே போதும். மனித உடலுக்கு 22 முதல் 26 வரை வைக்கலாம் (வெளிப்புற வெப்பநிலையை பொறுத்து). இதனால் பூமி வெப்பமாதலையும் தவிர்க்கலாம். மின்வெட்டையும் குறைக்கலாம்.

4.   இன்று கணினி உபயோகிப்போர் அதிகம். உபயோக நேரம் போக மற்றைய நேரங்களில் அணைத்து வைப்பதால் கணிசமான மின்சாரத்தை சேமிக்கலாம்.

5.   மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை தேவை இருந்தால் மட்டும் உபயோகப்படுத்தலாம் அல்லது மாற்று வழி இருந்தால் செயல்படுத்தலாம். உதாரணமாக, வெண்ணீருக்கு சூரிய அடுப்பு உபயோகிக்கலாம். INDUCTION STOVE க்கு பதிலாக GAS STOVE / OIL STOVE பயன்படுத்தலாம்.

6.   இன்று TV தவிர்க்க முடியாத நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஆனால் கோடைகாலங்களில் TV தவிர்த்து சுற்றுலா , விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

 

       இவையெல்லாம் மின்வெட்டு வராமல் தடுக்க வழிகள். வருகின்ற மின்வெட்டை சமாளிப்பது எப்படி?

 

1.   வீட்டில் INVERTER உபயோகிக்கலாம்.

2.   மின்சாரத்தையே நம்பி இல்லாமல் ALTERNATE POWER SOURCE ஐ பயன்படுத்தலாம். உ.தா. சூரிய அடுப்பு, சூரிய சக்தி விளக்கு, சூரிய சக்தி விசிறி, சூரியசக்தியில் இயங்கும் இன்னபிற உபயோக பொருட்கள்.

3.   முடிந்தால் சிறிய அளவுள்ள GENERATOR ஒன்று வாங்கி வைக்கலாம்.

 

       இவை எல்லாம் பணம் படைத்தவர்களுக்கு. சாதாரண மக்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களுக்கு இருக்கவே இருக்கு பனையோலை விசிறி, மண்குடம் நீர் மற்றும் குளிர்ந்த மோர்.

 

       சாமானிய மக்கள் வேறு என்னதான் செய்யமுடியும் ???!