பல் இல்லா
சிறு வாயாலே
மழலை மொழியால் பேசி
தலையை
இப்படியும் அப்படியும்
அசைத்து
இன்னிசையாய் பாடி
கவிதைகள்
பல எழுதியதைப்
போல்
காகிதத்தை
கிழித்த பின்பு
தன் பிள்ளை மொழியாலே
என் உள்ளமதில்
எழுதுகின்றாள் !
என் செல்லமகள் !
அவள் அழகு
புன்னகையில்
உலகத்தை
மறந்துவிட்டேன்!
அவள் பிஞ்சு விரல்
தீண்டலில்
என்னையே
மறந்துவிட்டேன் !!!
மனதையும்
மதியையும்
மயக்கி
எனை அடிமை
செய்திட்டாள்
என் செல்லமகள் !
இவள்
என் செல்வமகள்!