இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Monday, May 2, 2011

குழந்தை மொழி மழலை ( கவிதை ) :

பல் இல்லா

சிறு வாயாலே

மழலை மொழியால் பேசி

தலையை

இப்படியும் அப்படியும்

அசைத்து

இன்னிசையாய் பாடி

 

கவிதைகள்

பல எழுதியதைப்

போல்

காகிதத்தை

கிழித்த பின்பு

தன் பிள்ளை மொழியாலே

என் உள்ளமதில்

எழுதுகின்றாள் !

என் செல்லமகள் !

 

அவள் அழகு

புன்னகையில்

உலகத்தை

மறந்துவிட்டேன்!

அவள் பிஞ்சு விரல்

தீண்டலில்

என்னையே

மறந்துவிட்டேன் !!!

 

மனதையும்

மதியையும்

மயக்கி

எனை அடிமை

செய்திட்டாள்

என் செல்லமகள் !

இவள்

என் செல்வமகள்!