பெற்றோரை விட்டு வந்து
எதுவும் தெரியாத ஊரிலே
புதிதாய்
ஒரு குடித்தனம்!
மனமெல்லாம் மகிழ்ச்சி
பின்பு கருவாகி
ஆனந்த கண்ணீருடன்
ஓரினிய வாழ்க்கை!
கையிருப்பு கரைந்த பின்பு
கூலிவேலை பல
செய்தும்
தீரவில்லை சுயதேவை,
கனவுடன் ஓடிவந்து
இன்று
கனவு மட்டும்
கையிருப்பு!
கனவை நனவாக்குபவன்
தான்
கணவன் என்று
கள்ள காதல் கண்மறைக்க,
பெற்ற குழந்தையை
கைவிட்டு
வேறு ஊருக்கு பயணம்!
கையில் குழந்தையும்
நெஞ்சில் காதல் மனைவியும்
சுமந்தவன்
குழந்தையின் பசி போக்க
இன்று சுமை தூக்கியாய்!
தாயில்லா குழந்தைக்கு
தாயாகி
அடைகாக்குது சேவல்!