சிரிப்பதற்க்கு மட்டும்:
-------------
தருமன் தனது பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சமாதியில் மலர் கொத்தை வைத்து வணங்கிவிட்டு தன்னுடைய காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவர் கண்ட காட்சி அவரை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அங்கு ஒருவன் ஒரு சமாதியின் முன்னே மண்டியிட்டு கதறி அழுதுகொண்டிருந்தான். ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? ஏன் என்னை தவிக்கவிட்டு போனாய்? என்று அவன் கதறியது தருமனின் நெஞ்சத்தை ஏதோ செய்தது.
அவனருகே சென்று ஆறுதலாய், 'தம்பி, உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இப்படி துடிப்பதை பார்க்க மிகவும் வருத்தமாய் உள்ளது. இறந்து போனது உனது பையனா? என்று கேட்டார்.
"இல்லை".
பின்பு அண்ணனா?.
"இல்லை".
உன் நண்பனா?
"இல்லை"
.......!?!?!
சற்றே கோபமுற்ற தருமன், சற்று வேகமாய் " பின்னே யாருக்காக இப்படி அழுகிறாய்?" என்று கேட்க,
சிறிது நேரம் நிதானித்து பின்பு இப்படி பதிலளித்தான்,
"இவன் என் மனைவியின் முதல் கணவன்"
-----------
ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக்குலத்தில் யாரேனும் வேண்டுதலோடு காசு போட்டால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் அங்கு வந்தனர். கணவன் கண்ணை மூடி வேண்டிக்கொண்டு காசு போட்டான். பின்பு மனைவி கண்ணை மூடிக்கொண்டு காசை போட எத்தனிக்க, தவறிப்போய் உள்ளே விழுந்து இறந்துபோனாள். கணவன் மனதுக்குள் "அதற்குள் பலித்துவிட்டதே!".
-----------