இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 13, 2012

2012 இல் உலகம் அழியாது

'சூரியனை மறைத்த கரும்புள்ளி : உலகம் அழியப் போவதாக வதந்தி'
 
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் வதந்தியை மட்டுமே பரப்புவோம் அல்லது பரப்பிக்கொண்டிருப்போம் என்பது விளங்கவில்லை. உலகமே அழியப் போகிறது என்று ஒருசாரார் இங்கே புலம்பி கொண்டிருக்கிறார்களே தவிர எந்த நாட்டின் அரசாங்கமும் இதனை பற்றி கவலைப்படுவதே இல்லை. யாரும் இது தவறான வதந்தி என்று குரல் கொடுப்பதில்லை. குரல் கொடுத்தாலும் அது அந்த அளவு வலிமையாய் இருப்பதில்லை.
 
உலகில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பலர் இருந்தும் இது தீர்க்க  முடியாத புதிராகவே இருப்பது என்னமோ உண்மைதான். இருந்தாலும் மக்களை ஒருநிலைப் படுத்தவேண்டியது அவர்களின் கடமை அல்லவா? இங்கே திரியும் சில வேலை வெட்டி இல்லாத சில மூடர்களின் விஷமத்தால் இன்று நாட்டில் பல்வேறு வதந்திகள் பரவுகிறது.
 
12-12-12 நல்ல நாளா? இல்லை பாவ நாளா? உடன் பிறந்த பெண்களுக்கு புடவை எடுத்து தர வேண்டுமென்று ஒரு வதந்தி. எங்கோ ஒரு கோவிலில் தீபம் அணைந்துவிட்டது. அபசகுனம் என்று ஒரு வதந்தி. இப்போது சூரியனில் கரும் புள்ளி. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் படித்த முட்டாள்கள் தான் இத்தகைய வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு செல்போனின் வரவும் ஒரு காரணம்.
 
ஒரே நாளில் உருவானது அல்ல பூமி. அதே போல் ஒரே நாளில் அழிந்தும் போகாது. அதனால் மக்களே! 2012 உலகம் அழியாது.

கிறுக்கல் (எ) கவிதை :

என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
தினமும் பிறப்பதாய் எண்ணி
என்னை நானே ஏமாற்றுகிறேன்,
 
இன்றைக்கு மின்சாரம் வருமென்று
தினமும் நான் பிறக்கிறேன்!
 
வருமா வராதா என்று
கேளிக்கை பார்த்து சிரித்த நாட்கள்
 
இன்று என்னை பார்த்து
சிரிப்பதாய் தோன்றுகிறது.
 
என்னை நானே
என்னுள் சிறை வைக்கிறேன்
 
செய்த தவறுக்காக அல்ல
செய்யாத நன்மைக்காக !
 
 

குழந்தை கவிதைகள்:

பொம்மைக்கு
உறக்கம் வரவில்லை,
தாலாட்டு பாடியபடி
உறங்கியது குழந்தை!
 
சோறூட்டும் குழந்தையை
பார்க்கும் போது
சந்தேகம் வலுக்கிறது.
ஒருவேளை,
பொம்மைக்கும் பசிக்குமோ?
 
கொசு கடித்து
அழுதது குழந்தை.
மின்சாரம் இல்லா இரவில்
பனை விசிறி தேடி
விசிறியது
பொம்மைக்கு!
கொசு கடிக்குதாம்!