இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, November 2, 2011

காதல் மொழி

கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
'சீ போ!'
 
பதிலேதும் சொல்லாமல்
செல்லும் தென்றல் காற்றை
மடக்கிக் கேட்டேன்
என்ன சொன்னாள் என்னவள் என்று
 
பார்த்ததும் உள் மறையும்
நிலவும் சொல்லாமல் மறைத்தது
அவள் விழி மொழியின்
அர்த்தங்களை
 
ஆனது ஆகட்டுமென்று
ஏதோ ஒரு தைரியத்தில்
என்னவோ சொன்னாய் அன்று!
அது முதல்
கண்ணில் தூக்கமில்லை
வயிற்றில் பசியில்லை
மற்றும் சில பல இல்லைகள்
இன்றாவது சொல்!
 
கதவிடுக்கு வழியே
காதல் வலை வீசும் விழிகள்
வெட்கத்துடன் சொல்லிற்று
மீண்டும்
'சீ போ!'