இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Saturday, January 21, 2012

காதலியே! மீட்டெடு என்னை! (கவிதை)

மனவலி ஏற்படுத்தும்

மன வலி காதலுக்குண்டு,

 

அடிபட்டால் வெறும்

தேகவலி அது கணநேரம்

உன் கண்ணடி பட்ட

மனவலியோ ஆண்டுக்கும் !

 

அன்பே, பிரிவென்பது

உடலுக்கு மட்டும்தான்

உயிருக்கல்ல,

நம் உள்ளத்துக்குமல்ல !

 

ஆருயிரே, உன் நினைவால்

நான் தீட்டிய கவிதை ஓவியம்

என்னமாய் மின்னுகிறது பார் !

 

தூரிகை கொண்டு எழுதவில்லை!

இனிக்கும் வார்த்தைகள்

கொண்டும் எழுதவில்லை !

 

கரிக்கும் என் கண்ணீர்

கொண்டே எழுதினேன் !

மின்னுவது உலர்ந்துபோன

உப்புதான் !

 

பிரிவொன்று வேண்டாம் நம்

வாழ்நாளில் இனிஒருதரம் !

 

உன் மடியில்

சிறு தூக்கம் போட நேரமில்லை !

 

உனை கொஞ்ச

நேரமேதும் ஒதுக்கவில்லை !

 

நல்ல சீலையில்லை

பொழுதுப்போக்கு ஷோக்கு இல்லை

திரையரங்கம் செல்வதில்லை !

 

உனக்கான என் நேரம்

தூக்கத்தினால்

துக்கமாகிறது !

 

இது அறியா பிழையே அன்றி

நானாக விதைத்தது இல்லை,

நீயேனும் புரிந்துகொள்வாய் !

உன் சந்தேகம் கொல்வாய் !

 

வேறு யாருக்கும் புரியாது

நான் படும் வேதனைகள்,

 

என் இதயத்தில் குடியிருப்பதால்

உனக்காவது புரியும்

உனக்காக நான் துடிப்பது!

புரியாமல் ஏன்

ஒரு மௌனம் ?

 

வெறும் சீலையும்

பொழுபோக்கு ஷோக்கும்

நகையும் நட்டும் காதலல்ல !

 

உன் கழுத்துவழியே

பின் கூந்தல் வருடி

சிலிர்ப்பதும் காதல்தான் !

 

பிறை நெற்றி தடவி

இதழ் முத்தம் பதிப்பதும் காதல்தான் !

 

கடற்கரை சந்திப்பும்

திரையரங்க சில்மிஷங்களும்

காதலென்று சொன்னது யார்?

 

பரிசலிப்பதும்

பின்பு பல்லிளிப்பதும்

எனக்கு வராத பொய் வேஷங்கள் !

 

சுத்த தங்கம் போன்ற

தூய அன்பு என்னுடையது,

அதனாலேயே அணிகலன்

ஆகாமல் துருப்பிடித்த

உன் ஜன்னல் கம்பியாய் !

 

காற்றில் உள்ள ஆக்ஸிஜன்

நமக்கு உயிர் கொடுக்கும்

அதுவே

இரும்பின் உயிர் எடுக்கும் !

 

உன் மௌனம் பலமுறை

எனக்கு உயிர் கொடுத்தது

அதுவே இப்போது

என் உயிர் குடிக்கிறது.

 

தொடரும் உன் மௌனம்

என்னை சிறுக சிறுக

காணாமல் போக செய்கிறது

 

முழுவதுமாய் கரைவதற்குள்

உன் இதழ் திறந்து

எனை மீட்டெடு!