உலக அழகிப்போட்டி என்றில்லை. எந்த ஒரு அழகி போட்டியானாலும் நிச்சயம் வெறும் அழகுக்கு மட்டும் பரிசு கிடைத்துவிடுவதில்லை. அழகுடன் அறிவும் இருந்தால் மட்டுமே பரிசும் புகழும். ஆனால் எனக்கு தெரிந்து ஐஸ்வர்யா ராய் தொடங்கி நம்மூர் லோக்கல் அழகிகள் வரை போட்டியில் வென்றபின்பு தங்கள் 'புற அழகையும்' 'புகழையும்' மட்டுமே முதலீடு செய்கின்றனர். இதுவே வெளிநாட்டில் 'பொதுசேவை' என்பதை கூட சேர்த்துக்கொள்வார்கள். அவ்வளவே.
இதுவரை எனக்கு தெரிந்த வரையில் எந்தவொரு அழகியும் 'மாவட்ட ஆட்சியர்' ஆகவோ, அல்லது அறிவு சார்ந்த துறையில் வல்லுனராகவோ ஆனதாக சரித்திரம் இல்லை. பரிசு கொடுக்கும் போது அழகும் அறிவும் வேண்டும் என்று அறிவுத்தும் போட்டியை நடத்தும் நடுவர்கள் பரிசு கொடுத்தபின்பு உண்மையிலேயே அவர்களின் அறிவின் உபயோகத்தை காண்பதில்லை.
வெறும் புற அழகை வைத்து மட்டும் பணம்பார்க்கும் இவர்களுக்கு 'அழகிபோட்டி' தேவையா? அப்படியே நடத்தபெரினும் அதில் 'அறிவு அல்லது சமயோஜித அறிவு ' சார்ந்த கேள்வியோ தேவையா? அப்படி கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் 'அழகிகள்' பின்னாளில் அதனை முற்றிலுமாக மறந்துவிடுகிறார்களே, இதற்கு விதிமுறைகள் இல்லையா?
வெறும் சோப்பு, வாசனை திரவியம், ஆடைகள், ஆபரணங்கள், அலைபேசி விளம்பரங்களுக்கு மட்டுமே உபயோகப்படும் இந்த அழகிகள் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமா?