இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, January 5, 2012

வியப்பு (கவிதை) :

காலை பனிக்குள் சூரியன்!
சிறிய விதைக்குள் ஆலமரம்!
சின்னஞ்சிறு கருவில் திமிங்கலம்!
அணுவின் உட்கருக்குள் சக்தி!
என்று படைத்தாய்!
 
இத்தனை பெரிய
மனித மூளைக்குள்
சாதி, மதம், மொழி
வைத்த நீ
அறிவை வைக்க
மறந்தாய்!
 
நித்தம் புது புது பிரச்சினையை
கிளப்பிவிட்டே வீண் -
வம்புவளர்க்கும் அறிவு மட்டும்
எப்படி வந்தது
உன் படைப்பையும் மீறி!