இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, December 22, 2011

நாணயம்:

 செயல் - 1 : பெட்ரோல் பங்கிற்கு சென்றிருந்தேன். என் பைக்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடச்சொன்னேன். அவரும் பம்பை இயக்கி நிரப்ப துவங்கினார். ரூ.99.52 வந்தவுடன் நிறுத்திவிட்டு, அடுத்த வண்டியை அழைத்தார். நான் அவரிடம் மெதுவாக 'நான் 100 ரூபாய்க்கு போடச்சொன்னேன்' என்றேன். அவரும் 100 க்கு தான் போட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு, இன்னும் கொஞ்சம் விட்டால் 100.22 ஆகிவிடும், முதலாளி திட்டுவார் என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். நுகர்வோருக்கு 50 பைசா நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. தன்னுடைய 20 பைசா தான் முக்கியம் என்று நினைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.
 
செயல் - 2 : மொபைல் டாபப் செய்ய சென்றிருந்தேன். ரூ.99 க்கு ரேட் கட்டர் போடச்சொல்லி ரூ.100 கொடுத்தேன். அவரும் பெற்றுக்கொண்டு டாபப் செய்தார். மீதி ரூ.1 ஐ தரவேயில்லை. இதோ தருகிறேன் பொறுங்கள் என்று சொல்லி 15 நிமிடம் காக்கவைத்து என்னை அலைக்கழித்ததுதான் மிச்சம். கடைசிவரை தரவேயில்லை.
 
பெரும்பாலும் நமக்கெல்லாம் பேருந்து பயணத்தின் போது நடத்துனரிடம் சண்டை போட்ட அனுபவம் இருக்கும். ஆனால் இவை தவிர்க்கபடவேண்டியவை. இத்தகு செயல்கள் நிச்சயம் ஆரோக்கியம் அல்ல. இவற்றுக்கு தீர்வே இல்லயா? ஏன் இல்லை. E-Money. ATM, DEBIT கார்ட் வகைகளில் சில்லறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதுபோல் பணத்திற்கு பதில் SMART card வழங்கி இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.