இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, December 28, 2011

லோக்பால் :

அம்புலி காட்டி
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
அமுதூட்டும் தாய்!
அங்கே அது பாசம்!
 
லோக்பால் என்று சொல்லி
ஏதோ ஒரு பாலை
நமக்கூட்டும் அரசு!
இங்கே அது வேஷம்!
 
லஞ்சத்திற்கு இங்கே
அன்பளிப்பு என்று பெயர்,
வஞ்சதிற்கு இங்கே
அன்பு-அழிப்பு என்று பெயர்
 
விழித்துக்கொள் தோழனே
இது பருவமழை அல்ல
இவருடம் பொய்த்தால்
அடுத்த வருடம் மகசூல் பெற!
 
ஊழலுக்கு எதிர்க்குரல்
கொடுத்து உறங்கும்
சத்தியத்தை விழித்தெழ செய்வோம்!
நம் நாட்டிலிருந்து
லஞ்சத்தை விழுந்தோட செய்வோம்!