இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, May 29, 2012

நகரமா? நரகமா?

              கோடை வெயில் கொளுத்தும் இவ்வேளையில் இந்த பதிவு அவசியம் என்றே நினைக்கிறேன். சென்னையில் வசிப்பவர்களுக்கும், இங்கு வந்து போவோர்களுக்கும் நான் சொல்லும் விஷயங்கள் பரிச்சயமானவை. அக்னி நட்சத்திரம் 'அக்னி சூரியனாய்' கொளுத்துகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகமென்றாலும் சென்னை ரொம்பவே அதிகம்.
 
                அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் 'கருட புராண' தண்டனைகள் நினைவிருக்கலாம். அதில் வருவதைபோல் சென்னையில் தினமும் 'கும்பிபாகம்' தான். வருத்தும் வெயிலில் தினமும் வறுபடும் மக்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை. இது பரவாயில்லை. இந்த வெயிலில் 'போக்குவரத்து நெரிசல்' இல் சிக்கிக்கொண்டால் 'அந்தகூபம்' தான். இன்ச் இஞ்ச்சாக நகரும் வாகனங்களுக்கு நடுவே சிக்கி தவிக்கும் 'பைக்' பயணியை பார்க்கவேண்டுமே.
 
                  போக்குவரத்து நெரிசலை தாண்டி அடுத்த சிக்னலில் மாட்டாமல் செல்ல கொஞ்சம் வேகமெடுத்தால் அடுத்தது 'கிருமிபோஜனம்' தான். நமது நண்பரான போக்குவரத்து 'அதிகாரி' அப்படியே அட்டை மாதிரி உறிஞ்சிவிடுவார். இன்னும் அசிபத்தரவம், வஜ்ரகண்டம், பாணரோதம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
 
                   அதனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், செய்த பாவங்களை தொலைக்க காசி, ராமேஸ்வரம் செல்லும் மக்களே, சென்னைக்கு வாருங்கள். செய்த பாவங்களுக்கும், செய்யாத பாவங்களுக்கும் 'நரக' வேதனை அனுபவித்துவிட்டு, இறப்பிற்கு பின்  'முக்தி' பெறுங்கள்.