இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Wednesday, May 30, 2012

தேவை ஒரு தமிழ் அகராதி:

             இன்று தினசரி வாசிக்கும்போது கண்ணில் பட்ட வாசகம் ' துளை அடைக்கும் பணி தொடங்கியது'. எனக்கு உடனே ஒரு ஐயம். பணி துவங்கியது என்றோ அல்லது பணி ஆரம்பமானது என்றோ எழுதலாம் அல்லவா. விடை சொல்ல பக்கத்தில் ஆளில்லை. அப்பொழுது தான் உணர்ந்தேன் தமிழுக்கு 'அகராதி' இல்லை என்று. அனைத்து மொழிகளுக்கும் தமிழில் அகராதி இருக்கும் போது தமிழுக்கு தனியே அகராதி இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
 
             அதே போல் இன்னொரு பக்கத்தில் ' எதிர்ப்பு தெரிவித்தனர் ', 'கோஷம் போட்டனர் ' என்றெல்லாம் போட்டிருந்தது. 'எதிர்த்தனர்', 'கோஷமிட்டனர்' என்று எழுதலாமே. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழ் தனது தன்மையை இழந்து விடுமோ என்ற பயம் வயிற்றில் புளியை கரைத்தது.