சமீப காலங்களில் மழையே பெய்யவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்துவிட்டார் வருணன். தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஒரே மழை நீர். வெள்ளக்காட்டின் மத்தியில் மாட்டிக்கொண்டோரின் நிலைதான் கொஞ்சம் பரிதாபம். விவசாய நிலங்கள் எல்லாம் பாழ். நகரங்களில் சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் கலந்து ஒரே நாற்றம். நோய் கிருமிகளை சுமந்துகொண்டு இங்கும் அங்குமாக அலைகிறது, ஆள் தேடி. சாலைகள் எல்லாம் சேதமடைந்து பல ஊர்கள் தொடர்பு துண்டித்து போய்விட்டது. குண்டும் குழியுமான பாதைகள் இன்று முழு பள்ளங்களாக மாறி வாய் பிளந்து காத்திருக்கின்றன.
நிவாரண பணிகளை துரிபடுத்தும் நிலையில் அரசு. ஆங்காங்கே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள். மக்களும் தங்களுக்குள்ளே ஒற்றுமையோடு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய். புயல் சின்னம் அரபிக்கடலை நோக்கி சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். இல்லையென்றால் மழையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம்.
இந்த மழைநீரையாவது சேமிப்போமா? சந்தேகமே. நமக்கென்ன. பழிபோடத்தான் அரசும், அரசாங்க அதிகாரிகளும் உள்ளனரே. நம் கடமையை என்றைக்கு செய்திருக்கிறோம்>