இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, August 26, 2011

மீனவப்பெண் :

மீனவ புதுப்பெண்
காத்திருந்தாள்
கடல் சென்ற
கணவனுக்காக,
 
திரும்ப வந்தது
படகு மட்டும்
ரத்தக்கறை
தோட்டாவுடன்!
 
பாவம்!
மீனுக்கு தெரிவதில்லை
இந்திய எல்லையை
கடந்துவிட்டோம் என்று!