"நான் நெனச்சா உன்ன இல்லாம பண்ணிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பொய் வழக்குல உள்ள தள்ளிடுவேன்"
"நான் நெனச்சா உன்ன பணி இடமாற்றம் செஞ்சிடுவேன்"
"நான் நெனச்சா உன் சொத்தை எல்லாம் அழிச்சிடுவேன்"
"நான் மனசு வெச்சாதான் உனக்கு ப்ரமோஷன்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ஃபைல் அடுத்த மேசைக்கு போகும்"
"நான் மனசு வெச்சாதான் இந்த ப்ராஜக்ட் பிரச்சனை இல்லாமல் நடக்கும்"
"நான் மனசு வெச்சாதான் உன் மேல் உள்ள பழியை தொடைக்கமுடியும்"
இவை திரைப்படத்தில் வரும் 'பன்ச்' டயலாக் இல்லை. தினசரி நாம் கேட்கும் சிலரின் 'மிரட்டல்' மொழிகள். அதிகார துஷ்ப்ரயோகம். ஆம். அதிகாரம் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இழிநிலை இன்றைய இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஏன்? நான் நினைத்தால் 100 பேருக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்குவேன், 4 குடும்பங்களை வாழ வைப்பேன், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என்று யாரும் சூளுரைப்பதில்லையே? ஒருவனை அழிக்க பயன்படுத்தும் அதிகாரத்தை, ஒருவர் வாழ உபயோக படுத்தலாமே? நாம் ஏன் செய்வதில்லை? நமது பலத்தை ஏன் எப்பொழுதும் பலவீனமானவர்களிடமே காட்டுகிறோம்?
பி.கு:என்றைக்கு தான் அவரவர் தனக்கு இடப்பட்ட வேலையை (மட்டும்) சரியாக பார்க்கப்போகிறோம்?