இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, July 7, 2011

பருவ மழை :

கடலிடம் கடன் வாங்கி
மேகமாய் திரிந்து
மழையாய் பெய்து
பின்பு
கடலுக்கு திரும்பும் பொது
வட்டியாய்
மனித உயிர்கள்!
 
துளி துளியாய்
வானத்து நீர்
விழும்போது
வரமாய் ,
பின்பு
உயிர்களை வாங்கும்போது
சாபமாய்.
 
ஒரே மழை
இரு வேடங்களில்!