இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Saturday, October 15, 2011

சமுதாயம் ஒரு கேள்விக்குறி

           என்னுடைய முந்தைய பதிவு வேடிக்கை கதைதான் என்றாலும் அதில் புதைந்துள்ள உண்மைகளை பார்த்தால் நமக்கு தலை சுற்றல் வரும் போல் உள்ளது. மதத்தின் பெயரால் அனைவரும் தங்களது சுயநல தேவையை மட்டுமே பூர்த்திசெய்து கொள்கின்றனர் என்பது தெளிவாக புலனாகும். மனித நேயம் என்பதையே மறந்து தங்களது சுய லாபத்திற்காக 'மதத்தை' பயன்படுத்தும் இழிநிலை வருந்த தக்கது.
 
          ஆதியில் மனிதன் மிருகத்தோடு மிருகமாய் வாழ்ந்த காலத்தில், அவைகளிடமிருந்து தனித்து தெரிய சற்று புத்தி முற்றிய மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது தான் 'சமூக கட்டுபாடு'. அதுதான் நாளடைவில் மாறி மதமாய், பின்பு ஜாதியாய் உருவெடுத்தது. நாகரீகம் தோன்றிய காலத்தில், குழுக்களாய் வாழ்ந்த மனிதன் வேறொரு குழுவை எதிரிகளாக பாவித்து பகை பாராட்டி வந்தான். ஒரு நாகரீகத்தை சேர்ந்தவன் மற்றவனை பகையாக நினைத்தான்.
 
          நாகரீகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் மதத்தின் பெயரால் பகை பாராட்டி வருகிறோம். மிருக வாழ்க்கை வாழ்ந்த 'கற்கால' மனிதர்களாய் இன்றும் நம்முள் சில புல்லுருவிகள். வெறும் பாண்ட், சட்டை, டை மட்டுமே நாகரீகமில்லை. மனித நேயம் தான் நாகரீகம். வெறும் மதப்பற்று மட்டுமே பக்தியில்லை, பிற உயிர்களின் மேல் அன்பு தான் பக்தி.