இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Saturday, October 15, 2011

சிங்கும் மதபோதகரும் (நெட்டில் படித்தவை)

                ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலை முடிந்த பின்பு, வீட்டிற்கு வெளிப்புறத் தோட்டத்தில் நமது திருவாளர் சிங் அவர்கள் தந்தூரி சிக்கனையும், மட்டன் வருவலையும் செய்வது வழக்கம். ஆனால் பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள் அனைவரும் தீவிர கத்தோலிக்கர்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதில்லை. அசைவம் சமைக்கும் போது அதிலிருந்து வரும் வாசம் கத்தோலிக்கர்களின் விரதத்தை சீண்டி பார்த்தது. அதனால் அவர்கள் தங்களின் மதபோதகரிடம் முறையிட்டனர்.
 
                ஒருநாள் அவரும் திருவாளர் சிங்கை சந்தித்து மதம் மாறிவிடும்படி வற்புறுத்தினார். நீண்ட நாள் போதனைகளுக்கு பிறகு அந்த நன்னாளும் வந்தது. போதகர் சிங்கின் மீது புனித நீரை தெளித்து " ஒரு சீக்கியனாக பிறந்தாய், சீக்கியனாக வளர்ந்தாய். ஆனால் இப்போது நீ ஒரு கத்தோலிக்கன்" என்றார்.
 
               பிறகென்ன, அண்டைவீட்டார் அனைவருக்கும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்களின் ஆனந்தம் நீடிக்கவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமையே அசைவத்தின் வாசம் அவர்களின் மூக்கை துளைத்தது. கோபமுற்ற அவர்கள் மதபோதகரிடம் முறையிட்டனர். உடனே புறப்பட்ட அவர் சிங்கின் தோட்டத்திற்கு விரைந்தார். இன்று அவனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்று சென்றவர் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்தார்.
 
                 நடந்தது இதுதான். நம்ம திருவாளர் மிகவும் பக்தியுடன் புனித நீர் இருத்த ஒரு புட்டியை திறந்து வறுத்த கோழி மற்றும் ஆட்டு கறி துண்டுகள் மேல் தெளித்து இவ்வாறு சொன்னார் "நீங்கள் கோழியாகவும், ஆடாகவும் பிறந்தீர்! கோழியாகவும், ஆடாகவும் வளர்ந்தீர்! ஆனால் இன்று நீங்கள் உருளை கிழங்கும் தக்காளியும்".