இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, September 30, 2011

மங்காத்தா - திரை விமர்சனம்:

            வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்த கிரிக்கெட் திரைப்படம். 'தல' அஜீத், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் இணைந்து மிரட்டி இருக்கிறார்கள். கதைக்களம் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் அதனை சார்ந்தவர்கள். கொள்ளைக்காரனிடம் கொள்ளை அடிக்கும் கதாநாயகன் கதை. கதைதான் நாயகன் என்றாலும் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் செண்டிமெண்டுக்காக த்ரிஷா, ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி, கவர்ச்சிக்காக லஷ்மி ராய் மற்றும் பிரபலமான வாரிசு நடிகர்கள். சலிப்பில்லாத திரைக்கதையாலும் யுவனின் இசையினாலும் படம் 'போர்' இல்லாமல் நகர்கிறது.
 
           பிரேம்ஜி அறிமுகமாகும் காட்சியில் இருந்து குண்டடி படும் கட்சி வரை நூடுல்ஸ் தலையனாக வந்து காமெடி செய்கிறார். அஜித்தும், அர்ஜுனும் ஒன்றாக போலீஸ் ட்ரைனிங் எடுத்தவர்கள் என்று கிளைமாக்ஸில் 'போட்டோ' வுடன் காட்டிவிட்டு, ஆண்ட்ரியாவுக்கு அஜித்தை தெரியாதது போல் காட்டியது, 40 வயது இளைஜனை கண்டதும் காதலிக்கும் த்ரிஷா, மனவளர்ச்சி குன்றியவராக போக்குவரத்து துறை கட்டுப்பட்டு அறையில் பிரேம்ஜி செய்யும் தில்லு முள்ளு, அந்த நால்வரும் செய்யும் அனைத்து திட்டங்களையும் அவர்களுக்கு தெரியாமலே 'ஃபாலோ' செய்வதாய் அவர்கள் பின்னாலேயே அலையும் அஜீத் என்று திரைக்கதையில் ஆங்காங்கே சிறு மற்றும் பெரிய லாஜிக் ஓட்டைகள். மற்றபடி 'மங்காத்தா' ஒரு சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம்.
 
           பைக் சாகசம், கார் சேசிங் என்று அஜீத் அசத்தி இருக்கிறார். கிளிமாக்ஸ் சண்டை ஆக்ஷன் பிரியர்களுக்கு தீனி போடுகிறது. லக்ஷ்மி ராய் வரும் பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் வில்லத்தனமாக பணத்தை அடிக்க திட்டம் தீட்டுவதை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. கதைக்கு ஆன்ட்ரியா மற்றும் அஞ்சலி போன்ற நடிகைகளின் தேவை என்ன என்று சத்தியமாக விளங்கவில்லை. வெங்கட் பிரபு தான் விளக்கவேண்டும். அந்த பாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் திரைக்கதையில் இல்லை. புதுமுகங்களை கூட போட்டிருக்கலாம்.
 
           மங்காத்தா – வெங்கட்பிரபுவின் சிக்சர்.