இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, September 22, 2011

கடவுளும் நானும் – IV (பக்தி வியாபாரம்):

         இப்பொருள் விற்பனைக்கு அல்ல என்று சில நுகர்பொருட்களில் பார்த்திருக்கலாம். அவை அரசால் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டவை. அவ்வாறு இறைவன் மக்களுக்கு இலவசமாய் வாரி இறைப்பது 'அருள்' தான். அதற்கு மனிதன் செய்யும் கைமாறு தூய பக்தி. ஏதோ சங்ககால கடவுள்கள்தான் 'இலவச' அருள் வழங்கினார்கள், இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறுமளவிற்கு 'பக்தி' வெறும் வியாபாரமாகி போய்விட்டது.
 
         ஸ்வாமி தரிசனம் ரூ.500, சிறப்பு பூஜை ரூ.350, தட்சணை ரூ.51, பூ மற்றும் பழம் கொடுத்தால் கடவுளின் பூரண நல்லாசி உங்களுக்குத்தான். கோவிலுக்கு வெளியே நம்ம யானையார் ரூ.1 வாங்கி கொண்டு ஆசீர்வதிப்பார். விலங்கு என்பதால் 'ரேட்' குறைவு. மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.
 
        பரிகாரம் செய்தால் செய்த பாவம் போய்விடும். இது லேட்டெஸ்ட். கொலை செய்துவிட்டு அரசுக்கு ஏதேனும் 'பரிகாரம்' செய்துவிடலாமே. எதற்காக காவல் துறை, நீதிமன்றம், சட்டம், தண்டனை. ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இறைவனுக்கு பரிகாரம் செய்வதால் வாழ்வை இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்குமா? 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' பழமொழியை உருவாக்கியவர்களே நாம் தானே. எங்கே திருந்தபோகிறோம்.
 
         ஆடு, மாடு, கோழி என்று கடவுளுக்கு பலி கொடுத்து, ஒரு உயிரை வதைத்து இறைவனை குஷிப்படுத்தும் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்ல!