அறியாமை:
வண்டொன்று பூ தேடி
ஊரெல்லாம் அலைகிறது!
பூக்கள் எல்லாம்
என்னவளைத்தேடி சென்றது
தெரியாமல்!
மொழி:
திகட்டுகிறது
தேனிசை
அவள் கண்களின்
குயிலிசை
கேட்ட பிறகு!
அழகு:
குயிலின் நிறம் போல
கூந்தல் கருமை
தாமரை மலர் போல
மலர்ந்த முகம்
மலரின் தேனைப் போல
உதிரும் புன்னகை
ஆனால்!
இதயம் மட்டும்
தங்கத்தை போல
ஏழை என்னால்
அடைய முடியாத
உயரத்தில்!