இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, September 13, 2011

அறியாத மொழி அழகு :

அறியாமை:
 
வண்டொன்று பூ தேடி
ஊரெல்லாம் அலைகிறது!
பூக்கள் எல்லாம்
என்னவளைத்தேடி சென்றது
தெரியாமல்!
 
மொழி:
 
திகட்டுகிறது
தேனிசை
அவள் கண்களின்
குயிலிசை
கேட்ட பிறகு!
 
அழகு:
 
குயிலின் நிறம் போல
கூந்தல் கருமை
 
தாமரை மலர் போல
மலர்ந்த முகம்
 
மலரின் தேனைப் போல
உதிரும் புன்னகை
 
ஆனால்!
இதயம் மட்டும்
தங்கத்தை போல
ஏழை என்னால்
அடைய முடியாத
உயரத்தில்!