இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, September 20, 2011

கடவுளும் நானும் – III (பெயர்கள் பலவிதம்):

              இஸ்லாமியர் வணங்கும் கடவுளுக்கு ஒரே பெயர் 'அல்லா'. கிறித்துவர்கள் வணங்கும் கடவுளுக்கும் ஒரே பெயர் 'ஏசு'. இந்துக்கள் வணங்கும் கடவுளுக்கு மட்டும் ஏன் ஆயிரமாயிரம் திருநாமங்கள். தெருவுக்கு தெரு கோயில். ஒவ்வொரு கோயிலிலும் கடவுளுக்கு வேறு வேறு பெயர். கடவுளுக்கு பெயர் சூட்டு விழா நடத்த நாம் யார். நடத்துபவன் அவனே என்று சப்பை கட்டுபவர்கள் விளக்கம் கூறட்டும். இந்தியாவில் மொழி, இனம், ஜாதி, மதம் என்று அனைத்திலும் வேறுபட்டு, ஊழலில் ஒற்றுமையாய் வாழ்ந்துகாட்டி 'வேற்றுமையில் ஒற்றுமை' கண்டோம். கடவுளுக்கும் அதே நிலையை கொடுத்துள்ளோம். வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் வேறு வேறு கதைகள் கூறினாலும் 'உண்மை' என்பது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அந்த 'உண்மை' என்ன?
 
            இறைவனின் ஆதி என்ன?
 
            Linux என்ற ஒரு கணினி OS உண்டு. அதனை யார் வேண்டுமானாலும் தனது இஷ்டத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதனை பிறருக்கும் கொடுக்கலாம். எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அது போல் யார் வேண்டுமானாலும் கடவுளின் உருவத்தை மாற்றியமைத்து இது என் கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம். கட்டுப்பாடு இல்லை. நமது விநாயகர் படும் பாடு இருக்கிறதே... வாயில்லாபிள்ளை. கம்ப்யூட்டர் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், அந்த விநாயகர், இந்த விநாயகர் என்று கடவுளை விளையாட்டு பொம்மை போல் பாவிக்கும் கொடுமை கலியுகத்தில் நடக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் கடவுளுக்கு இவை 'தெய்வக்குற்றம்' ஆகாது.
 
           ஏன் மற்ற மதங்களில் உள்ளது போன்று இந்துக்கடவுளை ஒரே 'பெயரில்' வணங்கக்கூடாது? கூட்டு பிரார்த்தனை ஒரே திசை நோக்கி, ஒரே நிலையில், ஒரே ஒரு கடவுளிடம் செய்தால் தான் பலன். இல்லையேல் ஆழ உழாமல் அகல உழுத கதைதான்.