இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, September 16, 2011

கடவுளும் நானும் – I (மனித சாயம்):

            கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் பழைய திரைவசனங்களாக மாறிப்போய் இன்று கடவுள் 'எந்த வடிவில்' இருக்கிறார் என்ற ஐயம் தலைதூக்கி நிற்கிறது. மனித வடிவில் வடிக்கப்பட்ட கடவுளின் உருவம் 'மனிதனின்' இயல்புகளுடன் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் நம் முன்னோர். பலவகையான குழப்பங்களையும், குளறுபடிகளையும் விதைத்து சென்றுள்ளனர். எந்த ஒரு செயலுக்கும் சரியான விளக்கமில்லை. விளக்கிச்சொல்ல ஆளும் இல்லை. மீறி வினா எழுப்பினால் 'தெய்வக்குற்றம்'. தினம் நாம் வணங்கும் கடவுளை அறிய ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.
 
           நான் எந்த கோட்பாடுகளுக்கும் எதிர் கேள்வி கேட்கவில்லை. விளக்கம் தான் கேட்கிறேன், ஏன் கோபிக்கிறார்கள் என்று பக்தன் ஒருவன் புலம்பிச்செல்வதை பார்த்தேன். ஏன் இந்த நிலை. அனைத்து மதங்களிலும் எல்லாம் விரிவாக, எளிதாக, சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கோட்பாடுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும் போது, பழமை வாய்ந்த இந்து மதத்தில் ஏன் இந்த 'இருள்'. குடும்பத்துடன் அருள்பாலிக்கும் இறைவனை அடைய 'துறவு' தான் வழி என்ற பாரபட்சம் ஏன்? சகோதரன், மாமன் , மச்சான் உறவு கொண்ட கடவுள்களை வணங்குபவர்கள் வேறு வேறு ஜாதியாய், உயர்வு தாழ்வு பாராட்டி வாழ்வதேன்?
 
மனிதர்களின் சாயம் கடவுளுக்கு பூசப்பட்டது ஏன்?