இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, August 30, 2012

முன்னிரவு பயணம் :

மெல்லியதாய் தூறல் போடும் வானம்
கையில் படபடக்கும் கவிதை புத்தகம்
காதில் பண்பலை வழியே இளையராஜா!
 
அருகில் அரட்டை நண்பர்கள் இல்லை!
வீண் கதை பேசும் மனிதர் கூட்டம் இல்லை !
 
யாருமில்லா ரயில்பெட்டியில்
தன்னந்தனியே நான் மட்டும்
இருளின் துணையோடு !
 
சிலசமயம் எனது முன்னிரவு
பயணங்கள் இப்படித்தான்
அமைந்து விடுகிறது
நான் படிக்கும் கவிதை போலே
தித்திப்பாய்!