இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Friday, April 6, 2012

ஐ.பி.எல். விளையாட்டு:

             ஆதிகாலத்தில் விளையாட்டு போட்டிகள் மனிதனின் வீரத்தை வெளிப்படுத்துவதற்காக விளையாடப்பட்டன. உதாரணமாக சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றை சொல்லலாம். பின்பு திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளையின் வீரத்தை சோதித்துப்பார்க்கவும் விளையாடப்பட்டன. ஊர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகள் பின்பு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பெற்றன. பரிசுகளையும் பதக்கங்களையும் அள்ளிச்சென்று வீட்டில் வைத்து அழகு பார்த்தனர். நாளடைவில் ஆரோக்கியம் என்ற நிலை மாறி பணம் மட்டுமே பிரதானமாகி இன்று அனைத்து விளையாட்டுகளுமே சூதாட்ட களங்களாகிவிட்டன.
 
            விளையாட்டு வீரரை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நிலை மாறி ஏலத்தில் எடுத்து 'தனக்காக' ஆடச்சொல்லி பணம் பார்க்கும் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இன்று விளையாட்டுகள் மாறிவிட்டன. ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்ற நிலை மாறி தனியொரு மனிதனுக்காக 'நகரங்களின்' பெயர்களில் நடைபெறும் இன்றைய விளையாட்டு போட்டிகள் நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
 
             விளையாட்டு - ஆரோக்கியம், பொழுதுப்போக்கு, வீரம் என்ற நிலை மாறி வெறும் ' சூது ' மட்டுமே மேலோங்கி நிற்கிறது.